இன்றய கிறிஸ்தவம் உலகப் பொருளுக்கு ஊழியம் செய்கிறது

இன்றய கிறிஸ்தவம் உலகப் பொருளுக்கு அதாவது
சாத்தானுக்கே ஊழியம் செய்கிறது!

தனக்கு பணம்,செல்வம்,பதவி,உயர்வு வேண்டும் என்று ஜெபிக்க சாத்தானே ஜெபிக்க தூண்டுவான்.

அதைப்பற்றிதான் இன்றய கிறிஸ்தவ நவீன போலி சாத்தானின் ஊழியர்கள் மக்களை பொருளாசையுள்ளவர்களாக சுயநலவாதிகளாக மாற்றிவிட்டனர்.

இன்று இருண்டகாலத்தில் கிறிஸ்தவம் இருக்கிறது.மிகப்பெரிய வஞ்சகம் ஒவ்வொரு சபையிலும் இருக்கிறது.

இதைப்பற்றி பேசக்கூட எல்லோருக்கும் தயக்கம்.ஏனெனில் எல்லோரும் மாயைக்குள் அடிமையாக தன்னை விற்றுப்போட்டுவிட்டார்கள்.

இன்றய அநேக அற்புதம்,எழுப்புதல் எல்லாம் சாத்தானால் அரங்கேற்றப்படுகிறது.

எப்படியெனில் ஒரு அற்புதம் நடந்தால் அற்புதத்தை பெற்றவர் முழுமையாக கிறிஸ்துவின் அன்பை பெற்றுக்கொண்டவர்களாக விளங்கவேண்டும்.

ஜீவனை அவர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை, மெய்யான மனந்திரும்புதல் இல்லை!

உலகத்தில் ஆசிர்வாதமாக இருக்கும்படி தான் என்ன செய்யவேண்டும் என்றே சபைகூடுகையில் பிரசங்கிப்படுகிறதே தவிர.நித்திய ஜீவனுக்கேதுவாக உள்ளான மனுசனுக்கு ஆகாரமாகிய கிறிஸ்துவின் சுபாவம்,பாவத்தில் இருந்து விடுதலை,கிறிஸ்துவுக்குள் வெற்றியுள்ள வாழ்கைப் போன்ற அடிப்படை வாழ்வியலை வலியுறுத்துவது காணப்படவில்லை!!!

ஊறுகாய் போல நித்திய ஆசீர்வாதத்தை பேசிக்கொண்டு மீதம் எல்லாம் உலக ஆசிர்வாதத்தை மையப்படுத்தியே காணப்படுகிறது.

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
1 யோவான் 2:15

ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
1 யோவான் 2:16

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post