உயர்வு வரும் போது மனத்தாழ்மையாய் இரு

உயர்வும்,புகழின் உச்சியில் நிற்கும்போது நம் இருதயத்தை பெருமையும்,கர்வமும் வராது மனதாழ்மையுடன் இவையும் மாயை உலகில் ஒரு நிலை என்று உணருவோம்.

உயர்ந்த இடத்தில் இருந்து கீழே விழுந்தால்., எழுந்திருப்பது மிக கடினம்.ஆகையால் நம் இருதயம் கர்வம்மும்,அஜாக்கிரதையும் வராதபடி மிக ஜாக்கிரதையும்,எச்சரிக்கையும் இருக்கவேண்டும்.

தேவனாகிய நம் தந்தையுடன் நின்று இந்த மாய உலகில் நாம் நீதியின் நிமித்தம் பட்ட துன்பங்களை நினைவுகூறும் வேளையையே விரும்பக்கூடிய ஒன்று.

ஆனால் உலக வாழ்வில் உயர்வு என்பது ஆவிக்குரிய வாழ்வுக்கு சறுக்கும் பாதைப் போன்றதே!

சாலமோன் ஞானியைப் போல உலகில் உயர்ந்தவர் எவருமில்லை.. அவருடைய ஆவிக்குரிய வீழ்ச்சி...

சிம்சோன் போல உலகில் பெலசாலி இல்லை ஆனால் எதிரிகளிடம் மாட்டிக்கொண்ட வீழ்ச்சி

ஆனால்...
யோசேப்பும்,தானியேலும் இதில் விதிவிலக்கு..

ஆகையால் உலகில் உயர்வு வரும்போது யோசேப்பு போல பழிவாங்காத குணமும்,தானியேல் போல தேவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணமும் வேண்டும்.

நம் வாழ்வில் நமக்கு தீங்கு செய்தவர்களுக்கு முன்பு நாம் கெத்தாக வாழ்கிறோம் என்று காட்டுவதல்ல வாழ்கை!!!

அவர்களை மன்னித்து அவர்கள் செய்த தீமைக்குப் பதில் நன்மை செய்து நம்மை தாழ்மையுள்ளவர்களாக நிறுத்திக்கொள்வ
தில்தான் உன்மையான வெற்றி அடங்கியிருக்கிறது.

வெற்றியின் எல்லைக் கோட்டிற்கு வந்து தோற்றுப்போகிறவர்கள் அநேகர்.
அவர்கள் மனநிலை வெற்றியில் எல்லையை தொடுவதற்கு முன்பு மனதில் வரும் பெருமையும்,அஜாக்கிரதையுமே..பின
்னால் வருபவர் முந்தி..வெற்றியின் எல்லையை தொட்டுவிடுவர்.

ஆகையால் அன்பு சகோதரர்களே நம் மனநிலையை கொஞ்சம் கிறிஸ்துவுக்குள் நிலைநிறுத்த கவனமாக இருப்போர அது நல்லது.

நமக்கு அநேக நண்பர்கள்,செல்வ
ங்கள்,உயர்பதவியில் இருப்பவர்கள் இருக்கலாம்...ஆனால் தேவனிடத்தில் நாம் மனதாழ்மையாக இராவிட்டால்...
எந்த மனிதரும் நமக்கு ஆபத்து காலத்தில் உதவமுடியாது.

நாம் செய்த நன்மைகள் நம் ஜீவனை காப்பாற்றலாமே தவிர...வீழ்ச்சியை அதானால் தடுக்க இயலாது.
என்னுடைய இந்த தாழ்மையான ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

என்னை நான் ஒரு சாட்சியாக வைக்கமுடியும்.

என் இருதயத்தில் நான் பலசாலிபோல எப்பொழுதெல்லாம் உணர்கிறோனோ அப்பொழுது வீண் பிரச்சனைகள் பிறரால் என்னை நோக்கி வருவதை அறிந்தேன்.

நான் கையில் ஆயுதம் வைத்துக்கொள்ள எண்ணி யோசிக்கும்போதெல்லாம் பாதுகாப்பை என் இருதயம் உணராதிருக்கிறது.
என் கையில் பணம் இருக்கிறது என்று என்னி எதாவது திட்டம் போட்டு பெருமிதம் அடையும்போது வீண் செலவுகள் தானாக வருகிறது.

என் முந்தய ரவுடித்தன வாழ்கையை நினைக்கும் போதெல்லாம் ரோட்டோரத்தில் சாதாரண சின்ன பையன் என்னோடு சண்டைக்கு வருவான்.அப்பொழுதுதான் என்னுடைய அகங்காரத்தை உணர்ந்திருக்கிறேன்.
நம் புயபலம்,பணபலம்,
செல்வாக்கு இவையெல்லாம் நமக்கு கண்ணிகளே .

தேவனுடைய பாதுகாப்பில் இருந்து... அவைகள் நம்மை விலக்கிவிடும்.
ஆகையால் நம் உள்ளத்தை மனதாழ்மையில் நிலைநிறுத்தி...நாம் இருக்கும் உயர்வு நிலையில் இருந்து நன்மையை மாத்திரம் சிந்திப்போம்.நமக்கு தீமை செய்தவர்களின் தீமையை எண்ணாதிருப்போம்!

Click below to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post