மாயைக்குள் சிக்கி மெய்மறந்து போகும் மனது

கிறிஸ்துவின் ஜீவனில் இருந்து வெளிப்படும் சிந்தை ஒன்றே உலகத்தின் மாயைக்குள் சிக்கி மெய்மறந்து போகும் மனதை விடுவிக்கமுடியும்.

நாம் எப்போதெல்லாம் கிறிஸ்துவின் சிந்தையில் இருந்து தவறுகிறோமோ அப்பொழுதெல்லாம் மாயையின் பொய்தோற்றத்தால் வஞ்சிக்கப்படுகிறோம்.
இவ்வுலகில் கிறிஸ்து இயேசுவுக்குக் நாம் ஒருங்கிணைந்த அவயங்களாக ஒன்று சேர்க்கப்பட்டும்படி ஒவ்வொரு அவயங்களும் அதற்குரிய வளர்ச்சி பூரணமாகவேண்டியத
ிருக்கிறது.

அந்த வளர்ச்சியை தடுக்கவே மாயையானது தனிப்பட்ட ஒவ்வொரு அவயங்களை மனதை வஞ்சித்து திருப்பி உலகத்தின் அநியாயங்கள்,அநீதிகள் நமக்கு விரோதமாக வரும்போது அவற்றில் தேவன் நமக்கு நீதி செய்யவேண்டும் என போராட வைக்கிறது.

உண்மையில்....மாயையான இவ்வுலகை ஜெயிக்கவேண்டும்.எப்படியெனில் கிறிஸ்துவின் ஜீவன் இவ்வுலகை ஜெயித்துவிட்டது.அந்த ஜீவன் நமக்குள் இருக்கிறது அந்த ஜீவனே உள்ளான புதியமனிதன் அல்லது புது சிருஷ்டி. நாம் கிறிஸ்துவின் சிந்தையில் நிலைத்திருந்தால் இவ்வுலகத்தை பார்க்கும் பார்வை நிஜமாக இருக்கும்.அந்த நிஜப்பார்வையில் நாம் பார்க்கையில் இந்த உலக வாழ்வு என்பது ஒரு மாய தோற்றம் .

இமைப்பொழுதில் நம்மை பல மில்லியன் நினைவலைகளுக்குள் இழுத்துச்சென்று மெய்மறக்கச்செய்யும் சக்தியுடையது இந்த மாயை!
இந்த மாயையை வதம் செய்யவே இவ்வுலகில் மாயைக்குள் நாம் வைக்கப்பட்டிருக்கிறோம்.

மாயைக்குள் இருந்தே மாயையைப் பற்றி சிந்திப்பது கூடாத காரியம் ஆகையால் கிறிஸ்துவின் சிந்தையில் இருந்து இவற்றை ஆராயும்போது...இந்த மாயை உலகம் எவ்வளவு பயங்கரமான பொய்தோற்றம்.

அப்படியானால் இந்த பொய் தோற்றத்துக்குள் நம் வைக்கப்படு அதில் இருந்து நம் மனது கிறிஸ்துவுக்குள் திருப்பப்படும்போது நிஜத்தை காண்கிறோம்.
அந்த நிஜம் என்ன என்பதை மாயையின் சிந்தையில் இருந்து நிதானிக்கமுடியா
து.

இப்பொழுது வரை நமக்கு கிடைத்த தெளிவு என்பது கிறிஸ்துவின் சிந்தையில் இருந்துமாயை பிரித்து பார்க்கும் நிலைக்குத்தான் ஒவ்வொரு கிறிஸ்துவுக்குள் இருக்கும் புதியமனிதன் பயனித்திருக்கிறான்.
நாம் பயனப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் நம் வளர்ச்சி என்பது அவயங்கள் சீர் பொருந்தும்படி ஒவ்வொரு அவயமும் அதன் அதன் அமைப்புபடி சரியான வளர்ச்சியை அடையவேண்டும்.

இந்த வளர்ச்சி ஒவ்வொரு அவயங்களுடன் தொடர்பில் இருக்கும்போதுதான் சாத்தியப்படுகிறது.
இதைத்தான் சகோதர ஐக்கியம் என்பது மகிமையுடையதும்,தேவனுடைய ஐசுவரியத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.

மகிமை என்பது மிக தெளிவை ஆவி ஆத்துமா சரீரம் ஒருங்கினைந்து..
..கிறிஸ்துவின் தலையுடன் ஒவ்வொரு அவயஙளும் சீர்பொருந்தும்படி பூரணமான வளர்ச்சியை காட்டுகிறது.
மாயைக்குள் சிக்கிய மனமே கிறிஸ்துவின் ஜீவனுக்குள் வா!
அங்கே உனக்கு வழிகாட்ட ஆவியானவர் காத்திருக்கிறார்.

நீ இவ்வுலக மாயையில் நடக்கும் எல்லாவித பொய் தோற்றங்களை பார்த்து மனதை அதில் வைத்து சிந்தித்தாய் என்றால்...உன் ஆத்தும மனிதன் நஷ்டமடைவான்.
நீ நிலையான அழியாத நித்திய ஜீவனை பெறுவதற்கு இந்த மாயை மிகப்பெரிய தடையாக இருக்கிறது. இந்த மாயையின் சக்திக்குள் உலகம் என்ற பொய்யான வாழ்வு உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.இந்த ஆளுகையில் இருந்து உன் மனது கிறிஸ்துவின் ஜீவனுக்கு திருப்பப்படவேண்டும்.அந்த கிறிஸ்துவின் ஜீவனில் இருந்து உன் மனது நிதானிக்கட்டும்.

கிறிஸ்துவின் ஜீவனை விட்டு பிரிந்த மனது மருபடியும் கிறிஸ்துவின் ஜீவனுக்கு திரும்பவே சிலுவையில் கிறிஸ்து இயேசு இவ்வுலகத்தை ஜெயித்து அவருடைய ஜீவனை நமக்குள் வைத்திருக்கிறார் அந்த ஜீவன் நம்மை அழியாத வாழ்வுக்கு நம்மை வழிநடத்துகிறது.
நீ உறங்கிக்கொண்டிருக்கும்போது சொப்பனம் காண்பதுப்போன்றே....
இப்பொழுது உள்ள மாயை வாழ்வும் அப்படியானதே!!!!

என் அவயமே கிறிஸ்துவின் ஜீவனுக்கு உன் மனதை திருப்பு அப்பொழுது நீ என்ன செய்யவேண்டும் என்ற புரிதலை அடைவாய்...
நிஜம் என்பதை காணும்போது .
பரலோக நித்திய வாழ்வு பயனத்தில் நாம் அனைவரும் ஒரே கிறிஸ்துவின் சரீரத்துக்குள் அதாவது நோவா செய்த பேழைக்குள் இருப்பதுபோல்...இந்த மாயையான உலக நீரோட்டத்துக்குள் இல்லாமல் அவற்றை மேற்கொண்ட கிறிஸ்துவுக்குள் இந்த மயைக்கு மேல் மிதந்துகொண்டு இருக்கிறோம்.

ஆத்துமாவே!

மாயையை வைதைக்கிறவன் நீ
நீயோ அதை மறந்து
மாயை உன்னை ஜெயிக்கும்படி உன் மனதை அதற்குள் திருப்பாதே!!!!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post