Happy women's day

1 அந்தப்படி மனைவிகளே உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
1 பேதுரு 3:1

2 போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.
1 பேதுரு 3:2

3 மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,
1 பேதுரு 3:3

4 அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
1 பேதுரு 3:4

5 இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரிகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.
1 பேதுரு 3:5

6 அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள். நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.
1 பேதுரு 3:6

7 அந்தப்படியே புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
1 பேதுரு 3:7

10 குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
நீதிமொழிகள் 31:10

11 அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்: அவன் சம்பத்துக் குறையாது.
நீதிமொழிகள் 31:11

12 அவள் உயிரோடிக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையல்ல, நன்மையே செய்கிறாள்.
நீதிமொழிகள் 31:12

13 ஆட்டுமயிரையும் சணலையும் தேடி தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.
நீதிமொழிகள் 31:13

14 அவள் வியாபாரக் கப்பல்களைப் போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
நீதிமொழிகள் 31:14

15 இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
நீதிமொழிகள் 31:15

16 ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
நீதிமொழிகள் 31:16

17 தன்னைப் பெலத்தால் இடைகட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
நீதிமொழிகள் 31:17

18 தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.
நீதிமொழிகள் 31:18

19 தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்: அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
நீதிமொழிகள் 31:19

20 சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
நீதிமொழிகள் 31:20

21 தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.
நீதிமொழிகள் 31:21

22 இரத்தினக்கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்: மெல்லிய புடவையையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.
நீதிமொழிகள் 31:22

23 தன் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.
நீதிமொழிகள் 31:23

24 மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.
நீதிமொழிகள் 31:24

25 அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது: வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.
நீதிமொழிகள் 31:25

26 தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.
நீதிமொழிகள் 31:26

27 அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.
நீதிமொழிகள் 31:27

28 அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்: அவள் புருஷனும் அவளைப்பார்த்து:
நீதிமொழிகள் 31:28

29 அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு: நீயோ அவர்கள் எல்லோருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.
நீதிமொழிகள் 31:29

30 சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
நீதிமொழிகள் 31:30

31 அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்: அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.
நீதிமொழிகள் 31:31

Download our daily bread app on below link.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post