நீங்கள் கிறிஸ்துவை எதற்காக பின்பற்றுகிறீர்கள்?

நீங்கள் கிறிஸ்துவை எதற்காக பின்பற்றுகிறீர்கள்?
(சுயபரிசோதனை)

இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
பிலிப்பியர் 3:10&11

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்திற்காக எல்லாவற்றையும் துறந்தார் பவுல். உலகத்தாலும் உலக மனிதர்களாலும் வரும் மகிமையை குப்பையாக எண்ணினார். அநேக ஜனங்களை அவருக்காக ஆதாயப்படுத்திக்கொள்ள அவரைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினார். மிகப்பெரிய செல்வந்தரின் மகனாகிய நான் இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்று அவர் துளியளவும் நினைக்கவில்லை. கமாலியேலின் பாதத்தின் அருகில் வேதாகமத்தை முழுமையாக கற்றுக்கொண்ட வேதபண்டிதன் என்றும் தன்னைக்குறித்து பெருமையாக எண்ணவில்லை. மாறாக கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் இழந்தார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேள்வி கேட்கும் விசுவாசியே! கிறிஸ்து உன்னை ஏற்றுக்கொண்டதிற்காக நீ அவருக்காக இழந்தது என்ன?

பலவகையான பாடுகளின் மத்தியிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உண்மையாய் பின்பற்றினார். பாடுகளை கண்டு சோர்ந்தும் போகவில்லை, அடிகளை கண்டு இயேசு கிறிஸ்துவை அறிவிக்காமல் இருந்ததும் இல்லை. உண்மையாய் கிறிஸ்துவை முழு இருதயத்தோடு பின்பற்றினார். ஒருவன் கிறிஸ்துவை பின்பற்ற விரும்பினால் என்னை பின்பற்றக் கடவன் என்று வைராக்கியமாய் முழங்கினார். எல்லா சூழ்நிலையிலும் மனரம்மியத்தை கற்றுக் கொண்டேன் என்று கூறினார். எல்லா இடங்களிலும் போராட்டங்களும் பாடுகளும் அவரை சூழ்ந்து காணப்பட்டன. கப்பல் பிரயாணத்திலும், சிறைச்சாலையிலும், ஏன் குளிர்காயும் போதும் போராட்டம் அவரை விடவில்லை. இவை எல்லாவற்றின் மத்தியிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவரோடு கூடவே இருந்து அற்புத அடையாளங்களை செய்து தமது நாமத்தை மகிமைப்படுத்தினார். கிறிஸ்து உனக்காக எல்லாவற்றையும் இழந்தார். நீ அவருக்காக இழந்தது என்ன?

அவரின் பாடுகளை தியானம் செய்து கொண்டிருக்கிற நீங்கள், அவருக்காக எவ்வளவு பாடுகளை சகித்தீர்கள்?மருத்துமனையில் பணத்தை அள்ளி இறைக்க தயக்கம் காட்டாத விசுவாசிகள்! மிஷனெரிகளை தாங்குவதற்கும் தேவனுடைய மகிமையான சுவிஷேசம் அறிவிக்க மட்டும் தயக்கம் காட்டுவது ஏனோ?கிறிஸ்துவை பின்பற்றுவதினால் எனக்கு என்ன கிடைக்கும் என்று உலகக் காரியங்களை எதிர்பார்த்து அவரை பின்பற்றாதிருங்கள். அவர் ஏற்கனவே நமக்காக எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டார். இனி அவருக்காக நாம் செய்ய வேண்டியதே பாக்கி, அவர் உங்களுக்காக தன்னுடைய திவ்விய அன்பை வெளிப்படுத்தினார், இனிமேல் என் ஜீவன் இருக்கும் வரை, என் நாசியில் சுவாசம் உள்ளவரை அவர் ஒருவருக்காகவே வாழ்வேன் என்று புதுத்தீர்மானம் எடுப்போமா? ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுக்காக வாழ்கிறோமா? சுயநலவாதியாக வாழ்கிறோமா?

இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
1 கொரிந்தியர் 15:19

Follow us on

Websites 
Daily bread 
https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons - 
https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com in

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post