இரண்டு வித அலங்காரம்

இரண்டு வித அலங்காரம்

*மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,*

*அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது*
 *(1 பேதுரு 3:3,4)*

*1. புறம்பான அலங்காரம் (1 பேதுரு 3:3)*

*2. உள்ளான அலங்காரம் (1 பேதுரு 3:4).*

  *1. வெளியே தெரியும் அலங்காரம் (1 பேதுரு 3:3).*

   *2. மறைந்திருக்கிற அலங்காரம்  (1 பேதுரு 3:4).*

*1. சரீரத்தில் செய்யப்படும் அலங்காரம் (1 பேதுரு 3:3)*

*2. ஆவியில் பெற்றுக்கொள்ளும் அலங்காரம் (1 பேதுரு 3:4)*

*1. மயிரைப் பின்னுவது, பொன் ஆபரணங்களை அணிவது, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்துவது (1 பேதுரு 3:3).*

*2. சாந்தமும் அமைதலுள்ள ஆவியால் அலங்கரிப்பது (குணத்தால்) (1 பேதுரு 3:4).*

*1. விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (1 பேதுரு 3:3)*

*2. விலையேறப்பெற்றது (1 பேதுரு 3:4).*

*1. அழியக்கூடிய அலங்காரம் (1 பேதுரு 3:3)*

*2. அழியாத அலங்காரம்  (1 பேதுரு 3:4).*

*1. பூமிக்குரிய மனைவியின் அலங்காரம் (1 கொரி. 7:34).*

*2. கிறிஸ்வின் மனவாட்டியின் அலங்காரம் (சங். 45:13).*

*உங்களுடைய அலங்காரம் எது? புறம்பான அலங்கரிப்பா? உள்ளான அலங்கரிப்பா? உங்களைப் பார்த்தால் தேவனுடைய பிள்ளை என்ற வெளிப்படையான அடையாளம் இருக்கிறதா? பழைய ஏற்பாட்டு சபை மற்றவர்களை விட்டு பிரித்தெடுக்கப்பட்ட சபையாக மற்றவர்களுக்குத் தெரிந்தது (எண். 23:9). புதிய ஏற்பாட்டு சபையாரும் மற்ற மார்க்கத்தினரை விட்டு பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்பது பரிசுத்த ஆவியனாவரின் அஸ்திபார உபதேசம் (அப். 2:40). இதுவே இரட்சிக்கப்பட்டவர்களின் அடையாளம். இதுவே புதிய ஏற்பாட்டு இரட்சிப்பு.*

*உங்களுடைய அலங்காரம் புறம்பானதா? உள்ளானதா?*

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post