ஜெபத்தின் மதிப்பை யாராலும் அளவிடமுடியாது

ஜெபத்தின் மதிப்பை யாராலும் அளவிடமுடியாது!

நீ கண்ணீரோடு உள்ளம் நொறுங்கி ஜெபித்தால், என் கர்த்தரின் உள்ளம் உருகி விடும்! அவர் உன்னருகில் வந்து விடுவார். உடனே உன் ஜெபத்திற்குப் பதில் தருவார். அவர் அன்புள்ள தெய்வம். அவருக்கொப்பான தெய்வம் வேறொருவருமில்லை. ஆமென்.

நீ எலியாவைப் போல வைராக்கியமாய் ஜெபித்தால், அடைபட்டிருக்கும் வானம் திறந்து மழை பொழியும்!

நீ ஜான் ஸ்நாக்ஸ் போல ஆவியில் நிரம்பி ஜெபித்தால், உன் சத்துருவின் மேல் அக்கினி பற்றிப் பிடித்து எரியும்!

நீ ஆதி அப்போஸ்தலர்கள் போல் அபிஷேகத்தில் நிரம்பி ஜெபித்தால், நீ இருக்கும் அறையின் அடித்தளமும் அசையும்!

நீ பவுலும், சீலாவையும் போல, சிறையில் வேதனையின் மத்தியிலும் துதித்து ஜெபித்தால் கட்டுகள் உடையும், சிறைக்கதவு திறக்கும்!

நீ தானியேலைப் போல, சிங்கங்களின் மத்தியிலும் ஜெபிக்கும்போது அவைகளின் வாய்கள் கட்டப்படும்!

நீ யோபுவைப் போல, எல்லாம் முடிந்துபோன சூழலிலும் கர்த்தர்மேல் விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது இரட்டிப்பாய் ஆசீர்வதிக்கப்பட்ட எதிர்கால வாழ்க்கை உனக்கு அமையும்!

நீ முட்டிபோட்டு கண்ணீரோடு ஜெபித்துக்கேட்டால், உனக்காக. உலகத்தையும்கூட நம் ஆண்டவரின் கரங்கள் அசைத்து, மாபெரும் எழுப்புதலை அனுப்பமுடியும்!

ஆமென்

தேவபிள்ளையே, இதுவே அநுக்கிரக காலம்; இதுவே இரட்சண்ய நாள். கர்த்தருடைய வருகைக்காக எக்காளம் தொனிக்கப் போகும் காலம். இனியும் காலம் செல்லாது; ஆகவே ஆத்துமபாரத்தோடு நீ இன்றைக்கே, இப்பொழுதே, கண்ணீரோடு ஜெபிப்பாயா?

இயேசு உன்னை நேசிக்கிறார்! இயேசு உன்னை அழைக்கிறார்!!

அவர் வருகைக்கு நீ பரிசுத்தப்படு!

ஆயத்தமாகவேயிரு!!

ஜெபித்து, ஆத்துமாக்களை ஆயத்தப்படுத்து!

ஆமென்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post