இயேசு எந்த ஜாதி ?

படித்ததில் பிடித்தது.

இயேசு எந்த ஜாதி ?!

ஒருநாள் நான்
*சென்னையில் ஒரு பிரபல Church ல் உள்ள Matrimonial centre க்குப்* போனேன்.
அப்போது அங்கிருந்த Applications ல்..
Caste, Subcaste, Expected Dowry, Expected Jewels, Horoscope..  என்றெல்லாம் Columns இருந்ததைப் பார்த்து *அதிர்ந்து போனேன் !*

கிறிஸ்தவர்கள் திருமணத்திற்கு பெண்ணோ, பையனோ பார்க்கும்போது..

மனந்திரும்பி, இரட்சிக்கப் பட்டவரா ? மறுபடியும் பிறந்தவரா ?
நன்றாக ஜெபிக்கிறவரா ?
ஆராதனைக் கூட்டங்களுக்குத் தவறாமல் வருபவரா ?
நல்ல ஒழுக்கம், பண்பாடு உள்ளவரா ? என்பதைத்தான் முக்கியமாகப் பார்க்க வேண்டும் !

அதேபோல..
Dowry *வாங்குவது..
நகைகள் கேட்பது..
சீர்வரிசைகள் கேட்பது..
வீடு, நிலம் கேட்பது..
பைக், கார் கேட்பது,
விலை உயர்ந்த திருமண ஆடைகள் அணிவது,
லட்சக்கணக்கில் செலவழித்து.. திருமண மண்டபத்தில் Grand டாகத் திருமணம் செய்வது..
நிறைய செலவழித்து
Reception வைப்பது..
இதெல்லாம் *தவிர்க்கப் படவேண்டும் !

திருமணத்தை Church Campus சிலேயே *மிகவும் எளிமையாக Church Pastor நடத்தி வைக்க வேண்டும் !

இந்து மதத்தில் தான் ஜாதி பாகுபாடுகள் உள்ளன..

கிறிஸ்தவர்கள் இந்து மதத்தையும், ஜாதிகளையும் விட்டு வெளியே வந்தவர்கள்..
 
இயேசுவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு..
ஞானஸ்நானம் பெற்று.. மறுபடியும் பிறந்தவர்கள்..

இந்தப் புதிய பிறவியில் அவர்களுக்கு..
ஜாதி, வரதட்சணை, நகைகள், சீர்வரிசைகள், ஆடம்பரம், அலங்காரம், பகட்டு, படோடாபம் இதற்கெல்லாம் இடம் கிடையாது..

அதையும் மீறி.. கிறிஸ்தவர்கள் ஜாதிகளைப் பிடித்துக் கொண்டு இருந்தால்..
அவர்கள் இன்னும் இந்து மதத்தை விட்டு முழுமையாக வெளியே வரவில்லை என்றும்..
இன்னும் இயேசுவிடம் தங்களை முற்றிலும் அர்ப்பணிக்கவில்லை என்றும் தான் அர்த்தமாகிறது !

கர்த்தரால் நடத்தப்படும் பரிசுத்த விவாகத்திற்கு.. இந்துமதத்தின் ஜாதி, இனம், குலம், கோத்திரம் இவையெல்லாம் தேவையில்லை !

கிறிஸ்தவர்களின் பூர்வீகம்.. மோசஸ், நோவா, ஆபிரகாம், யோபு, டேவிட், ஏசாயா, தானியேல், எஸ்தர் போன்ற பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் !

கிறிஸ்தவர்களின் குலம்..
"இரட்சிக்கப் பட்டவர்கள் !"
கிறிஸ்தவர்களின் கோத்திரம்.. மறுபடியும் பிறந்தவர்கள் !"
கிறிஸ்தவர்களின் ஜாதி.. "பரிசுத்த ஜாதி !"

இதைத்தவிர வேறு ஜாதிகள் கிறிஸ்தவத்தில் இல்லை !

ஆகவே.. சபைகளின் போதகர்கள் தயவுசெய்து தங்கள்
Matrimonial applications ல் ஜாதி, வரதட்சணை, சீர்வரிசைகள் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் !

கர்த்தர் தமது பரிசுத்த ஜனங்கள் பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்து கிடப்பதைக் கட்டாயம் விரும்ப மாட்டார் !

இதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் சபையை விட்டுப் போனாலும் பரவாயில்லை !

சபை சுத்தமாகட்டும் !

சபை மனிதர்களுக்காக நடத்தப் படுவதல்ல.. தேவனுக்காக நடத்தப்படுவது !

பத்தாயிரம் பேருடன் சபை கைவிடப் படுவதைக் காட்டிலும்.. பத்துப் பேருடன் சபை எடுத்துக் கொள்ளப் படுவதே சிறந்தது !

தேவன் வசிக்கும் மோட்சலோகத்தில்.. இனம், நிறம், மொழி, ஜாதி என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது !

எல்லா நாட்டினரும், எல்லா மொழியினரும், எல்லா இனத்தவரும்,
எல்லா நிறத்தினரும்,
 எல்லா ஜாதியினரும்..
எல்லோரும் மறுருபமாகி, வெண்வஸ்திரம் தரித்து, எல்லோரும் ஒன்றாகக் கலந்துதான் வாழப்போகிறோம் !

அங்கே உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என்ற எந்த வித்தியாசமும் கிடையாது !

நாம் நித்தியமாக, என்றென்றும் வாழப்போகும் பரலோகத்திலேயே எந்தப் பாகுபாடுகளும், வேறுபாடுகளும் இல்லாதபோது..
நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வில் எதற்கு இத்தனை பாகுபாடுகள் ?

ஆகவே நாம் எல்லோரும் இப்பூலோக சம்பிரதாயங்களை விட்டுவிட்டு..பரலோக நித்திய வாழ்வுக்கு ஆயத்தப்படுவோமாக !

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post