தெய்வ பயமில்லாத மனிதர்கள்



இப்போ தெய்வ பயமில்லாதவர்களே
பயமுள்ளவர்கள் போல் நடிக்கிறார்கள்.
முகநூலில் மட்டுமல்ல!

பரிசுத்தமில்லாதவர்களே பயங்கர பரிசுத்தம் போல நடிக்கிறார்கள்.

தன் நிலையை உணர்ந்து சரிசெய்துக்கொள்ளாதவர்களே
பிறருக்கு போதிக்கிறார்கள்.

திருத்தவேண்டியதை திருத்தாமல் ஆடுகின்றார்கள் முகநூலில்.

நீதிமான்களை குற்றவாளி என்கிறார்கள்!
குற்றவாளிகளை நீதிமான்கள் என்று பட்டம் கொடுக்கின்றார்கள்.

தன்னை புகழுகிறவனை பெரிய பரிசுத்தவான் என்றும்.

தன்னில் இருப்பதை சுட்டிக்காட்டி இதை சரிசெய்துக்கொள் என்பவனை ஒரு பெரிய பாவி போலவும், அவனை காலி செய்யவும் நினைக்கும் முட்டாள் தனமான போதனையாளர்கள் தான் இன்று அதிகம்!!

எல்லாம் பகட்டும்,வேஷமும்,நடிப்பும்,
தெய்வ பயமில்லாத மனிதர்களின் அலங்காரமே முகநூலை ஆக்கிரமித்து இருக்கின்றது...

தேவனுக்கு முன்பாக இவை எல்லாமுமே நிர்வாணம்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post