கிருபை என்பது ஆவிக்குரிய பொக்கீச சாலை

கிருபை என்பது ஆவிக்குரிய பொக்கீச சாலை!

தேவனிடத்தில் தன்னைப்பற்றி முழுவதும் அறிந்து தன் இயலாமையை கூறி தன்னில் தேவனுடைய பெலன் கிரியை செய்யவேண்டும் என்று தாழ்மையாக மிக பணிவாக கேட்கிறவனுக்கு கிருயின் பெலன் உண்டாகி எவற்றில் தன் இயலாமையால் தோல்வியை  சந்தித்துவந்தானோ அவற்றின்மேல் வெற்றியைப் பெருகிறவனாக அவன் மனநிலையும்மாறி தைரியமும் உண்டாகி ஜெயஜீவியம் செய்கிறான்.

பாவத்தின் பெலன் அந்த மனிதனில் பெலன் செலுத்தமுடியாமல் தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறது.
முன்பு  அவன் விரும்பாவிட்டாலும் உள்ளத்தின் அடித்தளத்தில் அதை நிறைவேற்றத்தக்க எப்பொழுதும் பாவசிந்தைகள் அவன் சிந்தையை நிரப்பிக்கொண்டே வந்தனை.ஆவியில் அவன் பாவ சந்தோசத்தை வெறுக்கிறான் ஆனால் மாம்சத்திலோ அதை அடைய ஆசைகொள்கிறான் ஆனால் கிருபையின் பெலன் அவனுக்குள் வந்தப்பொழுதோ முற்றிலும் வேற சிந்தையுள்ளவனாக பரிசுத்தத்தையும் ,சுத்தமுள்ள மெய்மனசாட்சியை தக்கவைத்துக்கொள்ள வாஞ்சிக்கிறவனாக இருக்கிறான் .இப்பொழுது பாவசிந்தைகள் அவனுக்குள் உருவாக சாத்தான் பலவித உபாய தந்திரங்களை உபயோகிக்க முயற்ச்சி செய்கிறான்.

கிருபையின் பெலனை பெற்றவன் எப்பொழுதும் தேவ உணர்வுள்ளவனாக காணப்பட இப்பொழுது தேவனோடு எப்பொழுதும் ஐக்கியமுடையவனாக எந்நேரமும் ஜெபசிந்தையிலே இருக்கவேண்டும் அப்பொழுது தேவ சித்தத்தை எளிதில் பெற்று அதற்கு கீழ்படியவேண்டும் ஒன்றிலாவது நாம் தள்ளிப்போடுவோமானால் நிச்சயம் அதற்கான விலைகிரயம் அதிகமாக இருக்கும் .

அநேக தேவபிள்ளைகள் இப்படிப்பட்ட நேரத்திலே ஜெபசிந்தை இல்லாமல் உலக காரியத்தில் முழுவதுமாக மனதை செலுத்தி பிற்பாடு தேவ உணர்வை இழந்துப்போய்விடுகிறார்கள் .நாம் இதை அறிந்து சுதாரித்து எழும்புவதற்குள் சாத்தானோ அவன் வைத்த பொறிக்குள் மாட்டிக்கொள்ள வைத்த தவறான தெரிந்தெடுப்பு மூலம் நம்மை திசைதிருப்பி வெகுதூரம் அழைத்துச்சென்றுவிடுவான் .

அப்பொழுது நாம் எவற்றில் ஜெயித்தோமோ அவற்றில் மனதில் பாவ ஆசையுடனும் வெளியில் அதை செய்யாமல் இருக்க சுய முயற்சிகள் செய்துக்கொண்டு வருவோம் .சாத்தான் சிறு புழுக்களைக் காட்டி அதை நாம் வெறுக்கும் மனதில் வெற்றிப்பெற்றதுப்போல காட்டி எப்பொழுதும் பரிசுத்தமாக இருப்பதாக நம்மை நம்பவைத்து நாம் தேவனின் சித்தத்தின் இலக்கை தொடராதபடி நம் ஜெப நேரத்தை நாம் கைவிட அநேக உலக ஆதாய சூழ்நிலையை கொண்டுவருவான் இந்த சூழலில் நாம் கொஞ்சம் கொஞ்சமாக தேவ பெலனை இழந்து வருவதை நாம் அறியாமலே போய்விடுவோம் ஒருநாள் சிம்சோன் பிடிப்பட்டப்போது எப்பொழுதும் போல எழும்ப நினைத்து இயாலாததைப்போல பாவ சந்தோசத்தில் மதிமயங்கி அதினுள் இழுத்துச்செல்லப்படுவோம்.
ஆகையால் இந்த வார்த்தையை வாசிக்கும் நண்பனே !

ஒருவேளை நீ கிருபையின் பெலனை பெற்று ஜெயஜீவியம் செய்கிறவனாக இருந்தால் நீ எப்பொழுதும் ஜெபசிந்தையில் இருக்க ஜாக்கிரதையாக இரு!

தேவ ஆவியானவரின் மெல்லிய சத்தத்துக்கு செவிகொடுக்க உன் காதுகள் எப்பொழுதும் திறந்தே காணப்படட்டும்!

பாவவல்லமையில் மறுபடியும் அகப்பட்டு சுயமுயற்ச்சி என்ற கிரியையினால் பரிசுத்தமாக வாழ முயற்சிகள் செய்து தொல்வியையே பெற்றுக்கொண்டு வெளியில் மாய்மாலமாக நல்ல கிறிஸ்தவனைப்போல காட்டிக்கொண்டு உன் வாழ்கையை சாத்தானின் தந்திரசிறைச்சாலையில் முடங்கிகிடந்ததுப்போதும்.
ஆதிநாட்களில் தேவன் உனக்குள் இருந்து உன்னை தேற்றின வார்த்தைகளை நினைத்துப்பார்!

அவர் உன்னோடு அன்புடன் இடைப்பட்டதை சிந்தனை செய்!
உனக்காக உன்னோடு நேரம் செலவழித்த உன் தந்தையாகிய தேவனை எண்ணிப்பார்!

இதோ உனக்காக அவர் காத்திருக்கிறார் மறுபடியும் உன்னை எழும்பச்செய்ய வல்லவர் ஆனால் நீ எந்த நிலையில் விழுந்தாயோ அந்த நிலையை எண்ணிப்பார்த்து கதறி அழுது மனந்திரும்பு!

அப்பொழுது மறுபடியும் சேர்த்துக்கொள்ள தந்தையாகிய தேவன் ஆவலாக இருக்கிறார்.ஒருவேளை நீ மனந்திரும்பாத பட்சத்தில் கோபாக்கினையே உன் முடிவாக இருக்கும் .

அவர் மனந்திரும்பும் யாவரையும் நேசித்து அரவணைத்துக்கொள்வார் மனந்திரும்ப விரும்பாத மனிதன் மேல் சினங்கொள்கிறதேவன்.என்பதை மறந்துப்போய்விடாதே!

இன்றே நீ எந்நிலையில் விழுந்தாய் என்பதை அறிந்து மனந்திரும்பு!இதை வாசிக்கும் சகோதர சகோதரியே இந்தப்பதிவு உணக்காகவே! ஏன் எனக்கும் கூட..

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android.
http://www.mediafire.com/file/o605w84adwc3lb9/Daily_bread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post