இன்றய கிறிஸ்தவனைப் பார்த்து கேட்கவேண்டிய கேள்வி

இன்றய கிறிஸ்தவனைப் பார்த்து கேட்கவேண்டிய கேள்வி

1.நீ உலகத்தானா? அல்லது கிறிஸ்துவுக்காய் இவ்வுலகத்தில் பரதேசியைப்போல் உலகப் பற்று இல்லாமல் வாழ்கிறாயா?

2.”சகலமும் கிறிஸ்துவுக்காய்” என்றப்படி வாழ்கிறாயா?

3.உன் கிரியைகளைப் பார்க்கும் போது தேவன் மகிழ்கிறாரா?

4.மாயையான சினிமா.கிரிக்கெட்,விடியோ கேம்,இப்படிப்பட்ட பொழுதுப்போக்கில் ஆர்வத்தையுடையவனாக இருக்கிறாயா?

5.நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.என்று கிறிஸ்து உன்னைக்குறித்து சாட்சிக் கொடுக்கமுடியுமா?

6.உலக நண்பர்களுக்காய் உன் ஜீவியத்தை குறித்து கவலைப்படாமல் வேறுபாடு ஜீவியம் இல்லாமல் பொழுதுப்போக்கில் கவனம் செலுத்தி மாயையில் சிக்கிக்கொண்டு வாழ்கிறாயா?

சகோதரர்களே! உலகத்தானாக வாழ்ந்து நீ எவ்வளவு அதிகமாய் சத்தியத்தையும்,அதைக் குறித்து ஆராட்சிக் கட்டுரைகள் எழுதிருந்தாலும் உன் ஜீவியம் கிறிஸ்து சாட்சிக்கொடுக்கும்படி இல்லாவிட்டால்................காற்றில் சிலம்பம் அடிப்பவனாகத்தான் இருப்பாய்!

மற்றவர்களை குருடனாக இருக்கிறாய் என்று கூறும் போது நீயோ தன்னிலே குருடனாக இருப்பதை உணராமல் இருப்பது ஏன்?

நீ எழுதுவதும் பேசுவதும் லக்குக்காக,அல்லது உன்னைப் புகழந்து பலர் கமாண்ட் எழுதவேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதுகிறாயா?
மோசம் போகாதீர்கள்! யாக்கோபு 3:1 என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.

13.உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.

14. உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android.
http://www.mediafire.com/file/o605w84adwc3lb9/Daily_bread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post