கிறிஸ்தவம் செழிப்பு உபதேசமாக போய் கொண்டிருக்கிறது

இன்று கிறிஸ்தவமோ தேவனுடைய ராஜ்ஜியம் என்பது "" healthy & wealthy "" என்ற செழிப்பு உபதேசமாக போய் கொண்டிருக்கிறது

 ஆனால் வேதமோ
அப்போஸ்தலர் 14 -22. சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி,"" நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.""

இதில் எது சரி ?
சந்தேகமில்லாமல்- உபத்திரவங்கள் வழியில் தான்
இந்த உபத்திரவம் எப்படிப்பட்டது!
மண்பாண்டம் செய்வதுப்போன்றதே!
நாம் ஜென்ம சுபாவத்துடன் இருக்கும்போது அங்கே இடித்தல் அல்லது நொறுக்குதல் உண்டாகிறது இது ஆரம்ப உபத்திரவம்.

தாழ்மையும்,உனர்வும் உண்டாகி சரணடைதல் உண்டாகிறது.

பின்பு கிருபை உண்டாகி இரட்சிப்பு விடுதலை உண்டாகி, மண்ணானது ஒரு இடத்தில் சேர்க்கப்படுகிறது அது சபைக்கூடுகை!

அங்கே சத்தியம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

சத்தியத்தை கேட்டு தண்ணீர் உடன்படிக்கை உண்டாகிறது.சத்தியத்தின்படி நடக்க மண்ணானது கால்களால் மிதிக்கப்படுகிறது. அநேக உபத்திரவங்கள் மூலம் நமக்குள் ஆவிக்குரிய கணி உண்டாகிறது அப்படியே...

தேவனுடைய கரத்துக்குள் நாம் அடங்கி கீழ்படியும்போது நல்லப் பாத்திரமாக வனையப்படுகிறோம்.
அப்படிப்பட்ட நல்லப் பாத்திரத்தை தேவன் தன் விருப்பப்படி பயன்படுத்துவார் அந்தப்பாத்திரம் மேல் தேவனே ஆளுகை செய்வார் அதுவே தேவனுடைய ராஜ்யம்.

தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. லூக்கா 17 :20

இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது, இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார். லூக்கா 17 :21

தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. ரோமர் 14 :17

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android. 
https://www.mediafire.com/download/xw25rfr8xbdx9c3

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post