தேவனின் அன்பு மாறாதது

ஜலதோசம் இருக்கும்போது ஐஸ்கிரீம் சாப்பிட ஆசைவரும் இப்படித்தான் பாவத்தின் பாதிப்பில் இருக்கும்போது இன்னும் அதற்குள் ஆழமாய் செல்லவே ஆசைவரும் .

கொஞ்ச நாட்களில் ஆவிக்குரிய பெலன் குறைந்து எல்லா நம்பிக்கையும் இல்லாமல் போய் தன்னை தேவனுக்கு முன்பாய் நான் ஒரு துரோகி என்று புலம்பி, தேவன் தன்னை மன்னிக்கமாட்டார் என்ற சுயநீதியின் ஆழமான குழியில் விழுந்து அழுகிறவர்கள் இன்று பின்மாற்றக்காரர்களாய் இருப்போர் எத்தனை !

உங்களுக்கு ஒரு சத்தியமான உண்மை செய்தி
தேவனின் அன்பு மாறாதது
நீங்கள் அப்பா என்று அழைத்துப்பாருங்கள் இதோ சர்வ உலகத்தையும் படைத்த தேவன் தன்னுடைய காணாமல் போன பிள்ளைக்காக உன்னை ஏக்கத்தோடு அனைத்துக்கொள்ள அவலுடன் ஓடிவருவார் .

அவருடைய உள்ளம் உனக்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறது
உன்னை அவர் சிட்சிக்க ஒப்புக்கொடுத்த நாளில் இருந்தே உனக்காக இரங்க அவர் ஏக்கத்தோடு நீ வருவாய் என்று கண்ணீரோடு காத்திருந்தார் .

உன்னை ஜீவனுள்ள பாதையில் மருபடியும் காண்பேன் என்று தாயுள்ளம் கொண்ட அவருடைய உள்ளம் நம்பிக்கையோடு இருந்தது !

என் பிள்ளையே உலகத்தின் வாழ்வில் நீ சமாதானத்தை அடையவில்லை அங்கு உனக்கு ஏதும் கிடைக்கவில்லை அது ஒரு கானல் நீர் அதைத் தேடி ஏமாந்ததுதான் மிச்சம் நெடுதூரம் அலைந்து களைத்துவிட்டாய் இதோ இப்போதாவது மனந்திரும்பி என்னிடத்தில் வா!

உனக்காக இரவு பகலாக ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்.
நித்திய வாழ்வுக்காக இச்சுக சிற்றின்ப வாழ்வை விட்டுவிடு!
போதும் என்கிற மனதுடன் வாழ என்னிடம் வா!
உனக்கு இளைப்பாறுதல் தருகிறேன்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post