நீதி எங்கே? இரக்கம் எங்கே? நியாயம் இல்லையே!

நீதி எங்கே? இரக்கம் எங்கே? நியாயம் இல்லையே!

எத்தனை சீர்திருத்தவாதிகள் எழும்பினாலும்
எத்தனை சீஷர்கள் தியாகியாக எழும்பினாலும்.

இந்த உலகம் ஒரு புதை மணலே!
நீதியாய் நடப்பவனே
நாதியற்று நடுத்தெருவில் நிற்கிறான்.

உன்மையாக உழைத்தவன்
உதவாகரை என்று உதறிதள்ளப்படுகிறான்.

உத்தமனுக்கு அவன் உத்தமத்தாலே
துன்மார்கர்கள் எதிராகிறார்கள்.

ஏழையின் வயிறு வாடி வதங்குது.
செல்வந்தனின் வீட்டு நாய்க்கு கிடைக்கும்
மரியாதைக்கூட வீதியில் நடமாடும் மனிதனுக்கு இல்லை!

விசுவாச வார்த்தை பேசுகிறவெனே
துரோகியாக இருக்கிறான்.

சத்தியத்தையும்,பரிசுத்தத்தையும்
வாய்கிழிய பறைசாற்றுகிறவனே
கள்ளனும் கொள்ளைக்காரனாக இருக்கிறான்.

பொதுசேவை என்றப்பெயரில்
சோம்பேறிகள் தங்கள் வயிற்றை நிரப்புகின்றனர்.

நல்லவனாக நடிக்கிறவன் கொலைகாரனாக இருக்கிறான்.


உயிரை காக்கும் டாக்டரோ பங்களாவுக்கு ஆசைப்பட்டு
இல்லாத நோயையும் இருப்பதாக கூறி
காசுபார்க்கிறான்.

காவல் காக்கும் போலிசாரோ கருனை இல்லாமல்
அதர்மத்தை செய்கின்றனர்.

சட்டத்தை மீற லஞ்சம் ,சட்டத்தின் படி நியாயமோ
நடுத்தெருவில் ஏழையின் கண்ணீர்.

உன்னைப்போல பிறனை நேசி
அது வசனம்
ஆனால் எனக்கில்லை !
என்ற கிறிஸ்தவனின் மனபோங்கு!

ஆராதனை ஆராதனை என்பான்
ஆண்டவருக்கு அல்ல!
அதை பேஷன் ஸோ ஆக்கிவிட்டான்.

அபிஷேகம் என்பது என்னவென்று அறியாமல்
அதை சத்தமிடும் வென்கலத்தைப்போலாக்கிவிட்டான்
மாய்மாலத்தை அன்பு என்ற போர்வையில்
நடிகனாக மாறிவிட்டான் .

நீதி இனிமேல் இவ்வுலகில் கிடையாது.
நியாயம் எடுபட்டுபோயிற்று.
பணம் இருந்தால் பதவி.
பணம் இருந்தால்  படிப்பு
பணம் இருந்தால் ...பாவியும் நல்லவன்.

ஏழை பணம் படைத்தவனுக்கு எருவானான்.
ஏமாற்றுபவன் ஏழைக்கு இரங்குபவனாக
விளம்பரப்படுத்துகிறான்.

தேவனுக்கு தொண்டு செய்வதாக
பெண்களை கற்பழிக்கிறான்
சிறுவர்களை தலை துண்டிக்கிறான்.
எல்லாவற்றிலும் கலப்படம்
மனிதனில் நல்லவன் யார் என்று அறியமுடியாது.அங்கேயும் கலப்படம்.

உதவி செய்பவனை உதவிக்காக வருந்துவதுப்போல
பொறி வைத்து பிடிக்கிறான்.
இனி இந்த உலகம் வாழ தகுதியற்றது.

கொள்கைக்காக கொலை செய்யும் கூட்டம் ஒருபக்கம்.
பணத்துக்காக பெற்ற பிள்ளையை விற்கும் கூட்டம் ஒருபக்கம்.

இனியும் எவ்வளவு பொறுமைக்காக்க வேண்டும் இறைவா!
உமக்கு கோபம் வரட்டுமே!
அப்படியாவது.

இந்த அநியாய உலகம் அழியட்டும்
இங்கு நடக்கும் அட்டூளியத்தை பார்க்கமுடியவில்லை!
இரக்கம் இல்லை! துன்மார்கர்கள் செழித்து வளர்கிறார்கள்.
நீதி இல்லாத இந்த சாத்தானின் ஆதிக்கத்தை அழித்திடும்.

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android. 
https://www.mediafire.com/download/xw25rfr8xbdx9c3

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post