கசக்கும் சத்தியங்கள்

கசக்கும் சத்தியங்கள்

இந்த "2019", சத்தியம் இன்னதென்று அறியாது, தவரான அசத்தியங்களை சத்தியமென்று நம்பிக்கொண்டு, பரவசத்திலும், உணர்ச்சிவச மயக்கத்திலும் உள்ள அனைவரும் சிந்திக்க கொடுக்கப்பட்ட காலம்!

இனியும், நோவாவின் காலத்திலிருந்ததுபோல, நிர்விச்சாரமாக இருப்பார்களேயாகில்! அவர்களின் அழிவை அவர்களே சம்பாதித்துக்கொள்வதாகும்!
மரணமா ஜீவனா?
நீங்களே உங்களது சுயாதினத்தின்படி தீர்மானிக்கப்போகிறீர்கள்!

தேவ ஐனமே, விழித்துக்கொள்!
2019

இந்த வருடமே, உன் வாழ்நாளின் கடைசி வருடமாககூட இருக்கலாம். இல்லை என்று உறுதியாக சொல்லிக்கொள்ள யாராலும் மரண நாளை நிர்ணயிக்க முடியாது.

சரீர மரணம் உன்னை வந்தடைவதற்க்கு முன்னதாக, அதற்க்குள் இருக்கும் மெய்யான ஆத்தும மனிதனை எரி நரகத்திற்க்கு தற்காத்துக்கொள்!
(மத்தே 5:22:10:28.)

மரித்தவர்களின் சிந்தை, மரிக்கபோகும் சடலத்தின் "சுகபோக வாழ்வை மையப்படுத்தி " பேசிக்கொன்டிருக்கும்.
அந்தவித பேச்சுக்களை சத்தியம் என்று நம்பி மோசம்போவதை,
இந்த. "2019" வருடத்திலேயாவது நிறுத்திவிட்டு!

உனக்காக மரித்து உயிர்தெழுந்து,
மறுமையில் நீ அடைய வேண்டிய நித்திய வாழ்வுக்குறிய "சத்தியத்தையும், மெய் வாழ்வுக்கானதும்,பரம
வாழ்வுக்கானதுமான,
நித்திய காரியங்களுக்குரிய குறித்து பேசிக்கொண்டிருக்கும் சத்திய ஆவியானவருடைய சத்தத்திற்க்கு செவி கொடுத்து கேட்பாயா?

லூக் 16:31.
அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.
(படிக்க :-
லூக்கா 16:19-31)


2019

இது உனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு!"
லூக் 13:6-9.

அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.
உபா 32:29.

ஆவி சரீரத்தைவிட்டு பிரிந்த பின்பு, உன் ஆத்துமாவை நரகத்திற்கு தப்புவிக்க நீ ஜெபிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ,உன் ஆஸ்திகளினால் எதையாவது தேவனுக்கு செய்து தப்புவித்துக்கொள்ளவோ முடியவே முடியாது.

உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.பிரசங்கி 9:5.

கடந்த 2018 ஆம் வருடத்தில் மரித்தவர்கள், அந்த வருடத்துடன் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை தவரவிட்டவர்கள்.

இதில் ஜெய மாக வாழ்வதுபோல மாயையான வாழ்வை வாழ்ந்த பிரபலங்களும்,குறைவுபட்ட பொருளாதார நிலையில், பசியிலும் துன்பத்திலும் வாழ்வை கழித்த, சாதாரன மனிதர்களும்,

கடந்த வருடத்தில் சரீர மரணத்தை அடைந்த அனைவரும்,அவரவர்கள், அவர்களின் முடிவை அவர்களே சுயாதீனமாக சிந்தித்து, தீர்மானித்து கொண்டார்கள்.

இனி மரித்துப்போன அவர்களுக்கு நித்திய ஜீவனுக்கான சத்திய வாழ்வை இந்த பூமியில் வாழ்ந்து தேவனின் அங்கிகாரத்தை பெறும்படியான வாய்ப்பே இல்லை!
ஆனால்! இதை படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு உண்டு. இதை நீங்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ளப்போகிறீர்களோ அது உங்களிடமே உள்ளது!
கர்த்தர் வருகிறார்

வெளி 22:17
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post