என் ஆத்துமாவே ஏன் இளைப்பாறுதல் அற்றுத் தவிக்கிறாய்

என் ஆத்துமாவே ஏன் இளைப்பாறுதல் அற்றுத் தவிக்கிறாய்.

மனிதனே உனக்குள் இருக்கும் ஆத்துமா நித்தியத்துக்குரியது.

அந்த ஆத்துமா திருப்தியடைய உலகத்தில் வழியை தேடினால் ஏமாந்துப்போவாய்!
அந்த ஆத்துமா திருப்தியடைய நித்தியத்தால் மாத்திரமே முடியும்.
அந்த நித்தியத்துக்குப் போகும் வழி கிறிஸ்துவே! நீ இப்பொழுது கிறிஸ்துவுடன் ஐக்கியமாக நீ அவருக்குள்ளும் அவர் உணக்குள் இருந்தால் ஆத்துமா திருப்தியை உணரும்.

ஆனால் மனிதனே நீ சமாதானமாக திருப்தியை தேடி உலகத்தில் வழியை பார்க்கிறாய் ,தான தர்மம்,புன்னியம் செய்தாலும் நீ திருப்தி இல்லாமலே ஒரு வெறுமையை உணர்கிறாய்.

இந்த உலகம் ஒரு மாயை அதில் நீ சமாதானத்தைப் பெற எத்தனை திறமையை உபயோகித்தாலும்,அறிவை உபயோகித்தாலும் ஏமாற்றமே முடிவு!

நித்திய வாசியான ஆத்துமாவே
நீ உன் தேவனிடத்திலே சேர்ந்துவிடுவதே உனக்கு நன்மையானது.

ஆனால் மனிதனோ இவ்வுலக வாழ்வுக்காக தேவனிடத்தில் வந்து அழுகிறான்.எவ்வளவு பரிதாபம்!

நம் பிதா நம் தந்தை. அண்ட சராசங்களே  அவரால் உண்டானது.
அந்த தந்தையுடம் போய் அழிந்துப்போகிற காரியத்துக்காய் அழுதாயானால் அப்பா தன் பிள்ளையின் அறியாமைக்காக வருத்தப்படுவார்.

தன்னை அறியாமல் இருக்கும் என் மகனே உனக்காக எத்தனையோ பெரிய காரியங்களை நித்திதத்திலும்,உலகில் உன்னை மீட்க என்னையே கொடுத்தேன் நீயோ உலகத்தின் பிரஜைப் போல அதற்காக என்னை தேடுகிறாயே என்று அவர் உள்ளம் உனக்காக பரிதாபப்படுமே!
இன்றே நீ மனந்திரும்பு
நித்தியமே உன் வாஞ்சை
அதை அடைய உன் தகுதி
தேவனுடைய சுபாவமே
அந்த தேய்வீக சுபாவத்தால் நீ இவ்வுலகில் பரதேசியைப்போல இருந்து ஜீவிக்கும் ஜீவியமே பிரதானம்.அந்த ஜீவியத்தில் நீ செய்யும் கிரியைக்கு காரணமாக இருக்கும் சுபாவமே ஆவியின் கனியை தீர்மானிக்கும்

மாறாக நீ உலகத்துக்காக உன் ஜீவியம் இருந்தால் உன் கிரியை மாம்சத்தால் உந்தப்பட்ட மாம்சத்தின் கனியே கொடுப்பாய்.

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android. 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post