காலத்தை பிரயோஜன படுத்துங்கள்



காலத்தை பிரயோஜன படுத்துங்கள்.

காலத்தை பிரயோஜன படுத்துங்கள்,தேசமே விழித்துக்கொள்,கர்த்தருடைய வருகை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

உலகத்திலே நடந்து கொண்டிருக்கிற காரியங்களை பாருங்கள்.இவை அனைத்தும் உங்களுக்கு கர்த்தருடைய வருகை சமீபம் என்பதை உணர்த்தும்.

ஜனத்துக்கு விரோதமாக ஜனம்.

ராஜ்யத்துக்கு விரோதமாக ராஜ்ஜியம்.

யுத்தத்தையும் யுத்தத்தைப் பற்றிய செய்தியும்.

பூமியதிர்ச்சியும் பஞ்சமும்.

பாவம் பெருகி போகும்.

வானத்தில் அதிசயங்கள் தோன்றும்.

கொள்ளை நோய்கள் வரும்.

கர்த்தருடைய ஜனங்கள் உபத்திரவதற்கு ஒப்புக் கொடுக்கப் படுவார்கள்.

வேதத்தையும் இயேசுவையும் பரியாசம் பண்ணும் ஜனங்கள் தோன்றுவார்கள்.

வேத வசனத்திற்கான பஞ்சம் உண்டாகும்.

இதோ மேற்கூறிய அனைத்தும் நடக்கிறதை நாம் கண்டு கொண்டிருக்கிறோம்,ஆனாலும் முடிவு உடனே உண்டாகாது.தேவனுடைய வருகையில் நாம் காணப்படாவிட்டால் உபத்திரவத்திற்கு  ஒப்புக் கொடுப்படுவோம்.அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் மாட்டிக்கொள்வோம்.

என் ஜனமே உணர்வடையுங்கள்.

கொள்ளை நோயையே நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை,பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு,நவீன மருத்துவ வசதிகளை கொண்ட நாடு,சிறந்த மருத்துவர்களைக் கொண்ட நாடு,இவை அனைத்தையும் உடையவர்கள் இருந்து கூட இந்தக் கொள்ளை நோயில் இருந்து நம்மால் விடுபட முடியவில்லை.

இன்னமும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாதைகள் நம்மீது வரும்மானால் நாம் எந்த நிலமைக்கு உள்ளாகுவோம்.

நாம் கிறிஸ்தவராக இருந்தாலும் கூட வேதத்தை வாசிப்பதில்லை,ஜெபிப்பது இல்லை.பெயர் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.காலத்தை பிரியோஜன படுத்துங்கள்.

கர்த்தருடைய வருகைக்கு உங்களை ஆயத்த படுத்துங்கள்,வேதம்  வாசிப்பதிலும் ஜெபம் பண்ணுவதில்லும்  நிலைத்திருங்கள்.

Download our daily bread app on below link.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post