கர்த்தருடைய வருகை சமீபம்


கர்த்தருடைய வருகை சமீபம்.

தேவஜனமே மனம் திரும்பு கர்த்தருடைய வருகை சமீபம்.நடந்து கொண்டிருக்கிற காரியங்களை நீ காணும் பொழுது தேவனுடைய வருகை சமீபம் என்பதை நீ அறிந்துகொள்.இவையெல்லாம் உபத்திரவத்திற்கான ஒரு ஆரம்பம்.இனியும் காலம் செல்லாது,தேவனை அறியாதது போல உலகப்பிரகாரமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனமே விழித்துக்கொள்.தேவன் வருகையின்போது கைவிடப்பட்டவர்கலாய் நிற்காதே.

மனம் திரும்பி பாவத்தை விட்டு விலகு,இது வேதத்தை வாசிக்கவும் ஜெபம் பண்ணவும் உனக்கு கொடுத்திருக்கிற காலம்.இந்த நாளையும் பொழுது போக்கினால் கழிக்காதே.டிவி சினிமாக்களை பார்த்துக்கொண்டு,நரகத்திற்கு நேராக உன் ஆத்துமாவை அனுப்பாதே.

உன் பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு கதறு.சண்டே கிறிஸ்தவனாக நீ வாழ்ந்ததெல்லாம் போதும்.இன்றே நீ உன்னை தாழ்த்தி, உபவாசித்து உண்மையாய் மனம் திரும்பி அவர் அண்டை வந்து சேரு.பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொள்.அப்பொழுது எந்த ஒரு பயமும் உன்னை ஆட் கொள்ளாது.

இதோ, சீக்கிரமாய் வருகிறேன், இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:7

பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம், காலம் சமீபமாயிருக்கிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 22:10

அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:11

இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 22:12

நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:13

ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:14

நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:15

சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:16

ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள், கேட்கிறவனும் வா என்பானாக, தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:17

இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:20..

Repent

Download our daily bread app on below link.


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post