நம்மை தாழ்த்தி தேவனைத் தேட வேண்டிய காலம் இது


நம்மை தாழ்த்தி தேவனைத் தேட வேண்டிய காலம் இது.

நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது,
2 நாளாகமம் 7:13

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன். 
2 நாளாகமம் 7:14

மேற்கூறிய வசனத்தை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது,வெட்டுக்கிளிகளையும், கொள்ளை நோய்களையும்,அனுப்பும் போது நாம் என்ன செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சில பேருக்கு தெரிந்திருக்க கூடும்,வெட்டுக்கிளிகளின் பிளேக் சில தேசங்களின் மேல் வந்தது.(70 ஆண்டுகளில் வெட்டுக்கிளிகளின் மோசமான பிளேக் தற்போது கிழக்கு ஆபிரிக்காவை அழிக்கிறது. சமீபத்திய நாட்களில், எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியா முழுவதும் பயிர்களை அழித்த பின்னர் பூச்சிகள் தெற்கு சூடான், உகாண்டா மற்றும் தான்சானியா வரை பரவின.)

இப்பொழுது கொள்ளை நோய் வந்திருக்கிறது.
ஏராளமான நாடுகள் இந்தக் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது, இந்தக் கொள்ளை நோய் கட்டுப்படுத்த முடியாமல் ஏராளமாய் பரவிக்கொண்டிருக்கிறது.

இவற்றை நாம் காணும் பொழுது தேவ ஜனங்கள் ஆகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று தேவனே கூறியுள்ளார்.நாம் நம்மைத் தாழ்த்தி தேவனிடத்தில் ஜெபம் பண்ணும் போது,
அவர் நம் பாவத்தை மன்னித்து ஒரு விடுதலையை கட்டளையிடுவார்.

இன்று தேவ ஊழியர்கள் ஒன்றிணைந்து திறப்பிலே மன்றாடுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.நாமும் அவர்களோடு இணைந்து தேவன் தேவனை நோக்கி மன்றாடுவோம்.

தேவன் மனமிரங்கி நம்முடைய ஜெபங்களை கேட்டு  தேசத்திற்கு ஷேமத்தைக் கொடுப்பார்.

Download our daily bread app on below link.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post