கிறிஸ்துவுக்குள்ளானவர்களுக்கு புத்திச்சொல்லுங்கள்


கிறிஸ்துவுக்குள்ளானவர்களுக்கு புத்திச்சொல்லுங்கள்.

உலகத்தானை புத்திச்சொல்லி புரியவைத்துவிடலாம்.
ஆனால்..கிறிஸ்தவர்களுக்கு புத்தியே சொல்லமுடியாது...

எனக்கு எல்லாம் தெரியும் உன் அறிவுரைகள் எனக்கு அவசியமில்லை!
எனக்கு புத்தி சொல்ல உனக்கு அருகதை இல்லை என்பார்கள்.
இதனால் நமக்கு பக்தி விருத்தி உண்டாகாமல் நம் ஆத்துமா சோர்ந்துப்போகும்.

இரண்டு நாள் முன்பு என் ஆத்துமா சோர்ந்துப்போனது...
நேற்று ஒரு கிறிஸ்துவுக்குள்ளான ஒரு சகோதரர் எனக்கு ஆலோசனை கூறினார் என் ஆத்துமா களிகூறியது.

என் தப்பிதங்களையும் என் சுய தெரிந்தெடுப்புகளையும்...
என் ஆவியால் சோதித்தறிய அந்த புத்திமதி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது..
கிறிஸ்துவுக்குள்ளானவர்களிடம் நாம் இடைபடும்போது ஜீவனை உணரமுடிகிறது.
அங்கு புத்திச் சொல்லுதலும் கண்டிப்பும் தேவ அன்பினால் உண்டாகிறது.

 கிறிஸ்துவுக்குள்ளானவர்களுக்கு புத்திச்சொல்லுங்கள் அதன் மூலம் நம்முடைய விசுவாசமும் பக்திவிருத்தியும் நம்மில் பெருகும் ...
ஆ...என்னே விந்தை...
கிறிஸ்துவுக்குள் சகோதர ஐக்கியத்தின் ஐசுவரியத்தின் மேன்மை எத்தனையோ அருமையானது...

உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
எபிரேயர் 3:13.


Follow us on
YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w
Click below link to download our dailybread app.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post