எங்கு பார்த்தாலும் ஒருவித மரணபயம்.

 


எங்கு பார்த்தாலும் ஒருவித மரணபயம்.

எங்கு பார்த்தாலும் ஒருவித மரணபயம். மற்ற நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பரவும் பொழுது கேலி செய்தவர்கள் எல்லாம் அந்த வைரஸ் தன்னுடைய வாசல் வரை வந்துவிட்டது என்பதை அறிந்தவுடன் பயந்து புலம்புகிறதை நம்மால் பார்க்க முடிகிறது.

நம்முடைய அரசாங்கம் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு, ஜாக்கிரதையாய் அதன்படி நடந்தாலே போதும் இந்த கொரோனா வைரஸிடம் இருந்து தப்பித்துவிடலாம். அது ஒரு பெரிய விஷயமே இல்லை.

இது ஒரு பக்கம் இருந்தாலும், இதை ஆவிக்குரிய விதமாக பார்த்தால், ஆண்டவர் அனுமதிக்காமல் ஒரு முடிகூட தரையில் விழாது. அதுவே ஆண்டவர் அனுமதித்தால் நாம் எதையுமே தாங்கி தான் ஆக வேண்டும். அதைத் தாங்கிக் கொள்வதற்காக பெலனையும் அவர் தருவார்.

நாம் எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், "கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா" இதை நான் சங்கீதம் 127:2 நமக்கு கூறுகிறது.

ஆமாங்க, நம்மைப் பாதுகாக்கிறது கர்த்தருடைய வேலை. நம்முடைய வேலை அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பது மட்டுமே.

இன்று பரவி வருகின்ற கொரோனா வைரசுக்கு பயப்படுகின்ற நாம் என்றைக்காவது பாவம் செய்ய பயந்திருக்கிறோமா?

உண்மையிலேயே, இப்பொழுது பரவி கொண்டிருக்கிற கொரோனா வைரசை விட பாவம் என்கிற வைரஸ் மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் அது நம்மைக் கொண்டு சேர்க்கும் இடம் நரகம்.

இந்த கொடிய பாவத்திற்கு நாம் பயப்படாமலிருக்கிறோம். ஆனால் எதற்கெல்லாமோ பயப்படுகிறோம். நாம் செய்வதை தானே நம்முடைய பிள்ளைகளும் செய்வார்கள். அவர்கள் நம்மிடமிருந்து தானே கற்றுக் கொள்வார்கள்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களை கண்டவுடன் பயந்து ஓடுகிற நாம், என்றைக்காவது பாலிய இச்சைக்கு விலகியோடிருக்கிறோமா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

பொருளாதார நெருக்கடி வந்து வீட்டில் அத்தியாவசிய பொருட்கள் குறைந்துவிடுமோ? என்று கவலைப்படுகிற நாம், நாளுக்கு நாள் நம்முடைய அன்பு குறைந்து போகிறதே, என்று என்றாவது நினைத்து கவலைப்பட்டு இருக்கிறோமா?

நாளுக்கு நாள் நம்முடைய ஆத்தும பாரம் குறைந்து கொண்டே போகிறதே என்பதை குறித்து கவலைப்பட்டு இருக்கிறோமா? என்று கொஞ்சம் நிதானித்துப் பாருங்கள்!

இந்த மாதிரி பரவுகிற வைரஸ் இன்றைக்கு இருக்கும் நாளைக்கு போயிவிடும், ஆனால் ஆண்டவர் நம்மை அழைத்த அழைப்பு ஒருபோதும் மாறாது.

எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழத்தான் அழைக்கப்பட்டிருக்கிறோம். புறஜாதியார் எப்படி வாழ்கிறார்களோ, அதே போல நாம் வாழ அழைக்கப்படவில்லை.

நம்மைப் பார்த்து தான் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். தயவு செய்து நிர்விசாரமாக இருக்க வேண்டாம். இதை மறந்திட வேண்டாம். இதை உணர்ந்தவர்களாய், நாம் தேவனுக்கு பயப்படுவோம். அவர் கரத்தில் பயன்படுவோம். ஆமென்.

கிறிஸ்து நமக்கு ஜீவன் சாவு  நமக்கு ஆதாயம்!!

Follow us on

Websites
Daily bread
https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons -
https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post