நேற்றைய தொடர்ச்சி.பாவத்தின் வீரியம் எப்படிப்பட்டது?


நேற்றைய தொடர்ச்சி.

ஏன் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக வந்தார்?

பாவத்தின் வீரியம் எப்படிப்பட்டது?

கண்ணின் இச்சை:-

கண் இச்சையினால் மனது கவர்ந்திலுக்கப்பட்டு மாயையை விரும்பி அதை மனது விரும்பும் சிற்றின்பத்தன்மையில் தொடர்ந்து அது பொய் என்று உணர்ந்தும் அதில் இருந்து வெளியே வரமுடியாத ஒரு அடிமைச் சங்கிலி நம் கண்களில் கட்டப்பட்டுள்ளதை அறிவோம்,மறுபடியும் மறுபடியும் அந்த கண் இச்சை மனதை இழுத்துக்கொண்டே செல்லும்.

மனிதனின் ஆத்துமா அந்த மாயையான காட்சிக்குள் அடிமையாக்கப்பட்டுள்ளது இதில் இருந்து யார் நம்மை விடுதலையாக்குவார் என்ற எண்ணமே வராதபடி மறுபடி மறுபடி மாயை விசுவாசிக்கும்படி மனது அடிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மாம்ச இச்சை :-

பொய்யை விசுவாசித்ததின் நிமித்தம் நமக்குள் உலகத்தின் மாயையினால் மாம்சம் என்கிற பெலன் மனிதனுக்குள் வந்தது.அதன் நிமித்தமாக
மனிதனின் சுய விருப்பங்கள் அனைத்தின் பிறப்பிடமும் மாம்சமாகியது.

மனிதன் தன் இருதயத்தில் உள்ள மனசாட்சியில் எவ்வளவு சட்டங்களை வகுத்து சீர்படுத்த நினைத்தாலும் அதற்கு கட்டுப்படமுடியாதபடி.. ஆத்துமா மாம்சத்தினால் ஆளுகைக்குட்பட்டிருந்தது..இந்த மாம்ச இச்சைகள் ஒரு மனிதனுக்குள் இருந்து சுயம் என்கிற தன்மையில் இருந்து கிரியை செய்கிறது..

ஆகையால் மனிதன் தன் சுய ஆசை இச்சையினால் இழுப்புண்டு தானாக சோதனைக்குள் போகிறான்.
இது ஒரு இழுப்பின் வலையாக இருக்கிது.

ஜீவனத்தின் பெருமை:-

அறியாமையில் இருளில் இருந்தும் மாயைக்குட்பட்ட வாழ்வில் தன்னைத்தானே மிகைப்படுத்தி தன்னை பொருட்டாக எண்ணி இவ்வுலக வாழ்வை நிஜம் என்று நம்பி அதிகாரம்,புகழ்,மேன்மை,என்றவற்றை தன் சுய பெலனை சார்ந்து எழும்பு எண்ணங்களே இவைகள் .

இந்த எண்ணங்கள் இருக்கும் வரை மனிதன் இன்னும் தன்னைத்தான் உணரமுடியாதவனாக கட்டப்பட்டுள்ளான்.
இந்த மூன்று அடிமைப்படுத்தும் சங்கிலியில் இருந்து மனிதன் தன்னை விடுவிக்கமுடியாது.
ஆகையால் மனிதனை விடுவிக்க கடவுள் அதே மனித சாயலில் வந்து இந்த பாவத்தை மேற்கொண்டு,எல்லோருடைய பாவத்துக்காக தன் பரிசுத்த சரீர மரணத்தால் மரணத்தில் இருந்து விடுவித்து நம்மை மீட்டார்.
உலக மக்களே இந்த மாயையான உலகம் அழிவுக்குட்பட்டிருக்கிறது.

அவனவன் கிரியைக்குத்தக்க
நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டிருகிறது.
இயேசு கிறிஸ்துவை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர் செய்தவற்றை விசுவாசித்து அவருடைய ஜீவன் உங்கள் ஜீவனோடு கலந்து உங்கள் ஆவி ஆத்துமா,சரீரத்தை பரிசுத்தப்படுத்த ஒப்புக்கொடுங்கள்.

இனி காலம் செல்லாது..
மாயையான இந்த உலகம் அழியப்போகிறது..
நீங்கள் சேர்த்த சொத்து,சுகம்,பதவி,அதிகாரம் எல்லாம் அழியும் ஒன்றும் நிரந்தரமில்லை!
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து விசுவாசியாக இருப்போரும் விசுவாசியாத அனைவரும் நியாயதீர்ப்பில் நிற்கும் நிலை உண்டாகும்.

இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஜெயஜீவியம் செய்தவர்களுக்கு பிரதி பலனாக நித்திய ஜீவனும்,
விசுவாசியாதவர்களுக்கு நித்திய தண்டனையும் கிடைக்க இருக்கிறது.
ஆகையால்.....
உங்களுக்கு மனந்திரும்ப கிடைத்த இந்த வாழ்வில் அசட்டையாக இருந்து உங்கள் ஆத்துமாவை நஷ்டப்படுத்தாதீர்கள்.

Follow us on

Websites
Daily bread
https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons -
https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com in

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post