வாலிபனே! வாலிப பெண்ணே உனக்கான ஆலோசனை


வாலிபனே! வாலிப பெண்ணே
உனக்கான ஆலோசனை

1. உன் பெற்றோருக்கு தெரியக்கூடாது என்று செய்கிற எல்லாமே பாவம் தான்

2. உன் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆலோசனைகளை முதலில் உன் பெற்றோரிடம் கேள் அல்லது ஆவிக்குரியவர்களிடம் கேள்

உன் பெற்றோர் உன்னை விட படிப்பில் குறைவாக இருந்தாலும் அனுபவத்தில் அவர்கள் ஆசான்களே

3. தனிமையில் இருக்கும் போது கூடுமானமட்டும் mobile use பண்ணாதே

4. எதிர் பாலரை எந்த சூழ்நிலையிலும் தொட்டு பேசாதே

5. உன் பரிசுத்த வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படுத்துகிறது எந்த உறவும் வேண்டாம்

6. Mobile Internet Facebook Whatsapp Twitter இவைகள் உன் கட்டுபாட்டுக்குள் இருக்கும் வரை பயன்படுத்து பரிசுத்தமாக. இல்லையேல் நீ அதற்கு அடிமை...

7. யாவருடனும் பழகு ஆனால் ஆவிக்குரியவர்களுடன் மட்டும் ஐக்கியம் கொள்

8. உனக்கு முன்மாதிரி இயேசு மட்டுமே. நீ தான் மற்றவர்களுக்கு முன்மாதிரி

9. மற்றவர்களின் திறமையை பார்த்து எனக்கில்லையே என்று ஏங்காதே. உனக்குள் இருக்கும் திறமை விலையேறப்பெற்றது

10.தகுதியான வஸ்திரம் உடுத்து tight dress வேண்டாம். பெண்கள் transparent ah ஆடையை கட்டாயம் தவிர்க்க வேண்டும்

11. எந்த நபரோடு பேசும்போது அல்லது எந்த இடத்திற்கு போகும்போது உன் பரிசுத்தம் பாதிக்கப்படுகிறதோ அந்த நபரோடு பேசுவதை அந்த இடத்திற்கு போவதை தவிர்க்கவும்

12. உன் பெலவீனம் பிசாசுக்கு நன்கு தெரியும் நீ விட்டு வந்த பாவத்தை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துவான். அல்லது செய்யும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவான் கவனம்.

13. உன் ஜெபத்திற்கு பதில் வரும்வரை காத்திரு. தேவன் பேசாவிட்டால் அந்த காரியத்தை செய்யாதே.

14. இந்த உலகம் நாளுக்கு நாள் update ஆகும். நீயும் ஆகலாம் பரிசுத்த்த்தின்மேல் பரிசுத்தம் கிருபை மேல் கிருபை என .

15. Beach, park shopping mall இந்த இடங்களுக்கு கூடுமானமட்டும் குடும்பமாக போக பழகு. உலகத்தின் கவர்ச்சி உன் வாலிபத்தை கறைப்படுத்தப்பார்க்கும்

16. உன் விருப்பங்களை தேவனிடத்தில் சொல்ல்லாம் தவறில்லை. ஆனால் அவரின் சித்ததிற்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுக்கப்படும் அது உன் விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் கூட.

17.உலகத்தில் இருந்து வேதத்தை பார்க்காதே
வேதத்தில் இருந்து உலகத்தை பார் ஜெயக்கலாம்

உன் தாலந்துகளை யாரும் பாராட்டவில்லை என்று சோர்ந்து போகாதே , பரலோகம் பாராட்டுகிறது

மொத்தத்தில் நீ சாதாரண இந்த உலகத்திற்கு உரியவனல்ல,பரலோகத்திற்கு உரியவன்..

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post