மாத்தி யோசி

மாத்தி யோசி

செங்கடல் மூடியிருக்கிறதே என்று யோசிப்பதை விட, அதை அவர் இரண்டாய் பிளந்து வழிவிடுவார் என மாத்தி யோசி...

கோலியாத் எதிராக நிற்கிறான் என்பதை விட, அவன் தலையை என்கையில் கொடுப்பார் என மாத்தியோசி...

லாசரூ மரித்துவிட்டான் என்பதை விட, அவர் அவனை உயிரோடே எழுப்புவார் என மாத்தியோசி...

உலகம் உன்னை கீழே தள்ளுகிறது என்பதை விட, உன்னை உயர்த்த அவர் கரம் உண்டு என மாத்தியோசி...

உன்னால் முடியாது என்பதைவிட, அவரால் சிலுவையில் எல்லாம் முடிந்தது என மாத்தியோசி..

உனக்குள் இருப்பதை யோசிப்பதை விட, உனக்குள் இருப்பவரை யோசி..

இப்படி மாத்தியோசிக்கிறவர்களே அவருடைய மகிமையை காண்கிறார்கள்.

மாத்தியோசி...
மாற்றங்களை யோசி.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post