ஆவிக்குரியவர்கள் மனசேர்வடையவேண்டாம்


சகோதரர்களே! ஒருவிசயத்தை நீங்கள் புரிந்துக்கொண்டால்
இன்றய கிறிஸ்த நிலையைக் கண்டு சோர்ந்துப்போய் உங்கள் மனதில் உண்டான மனபாரம் உங்களுக்கு நீங்கும்!
என்னவெனில் ...உலக மனிதர்களில் ஐசுவரியவான் ஏழையை மதிப்பதில்லை!
அதே ஏழையோ பிறருக்கு உதவும் குணமுடையவராக இருப்பார்.
ஆனால் அவரிடமோ உதவ பொருட்கள் இருக்காது!
இயற்கை நியதியே! சுயநலமுள்ளவன் பரிபூரணமாக இருப்பதும் பொது நலமுள்ளவன் பரதேசியாக இருப்பான்.
அதே நியதிதான் ஆவிக்குரியவன்.விசயத்திலும் .
ஆவிக்குரியவன் இவ்வுலகில் பரதேசி அனுதின தேவையை மாத்திரம் கருத்தில்கொள்வான்.
இப்படிப்பட்டவர்கள் மிகக் குறைவே!
உலக ஐசுவரியத்துக்காகவும்,உலகத்தில் உயர்த்தப்படவும்,மேன்மையடையவும் விரும்பும் கிறிஸ்தவர்கள் ஏறாளம் .
அந்த ஆவியுடையவர்களே ஐக்கியமாக இருப்பார்கள்.இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!
பதர் பதரோடுதானே சேரும்.
பதர் ஒருபோதும் கோதுமையோடு சேராது.
ஆகையால் ஆவிக்குரியவர்கள் இன்றய நாட்களை நினைத்து மனசேர்வடையவேண்டாம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post