நித்தியம் மாத்திரமே நிஜம் !

இந்த மாயையான உலகில் மனிதனுக்கு வரும் தீங்குகளும் ஒரு புகையைப்போல் மறைந்துப்போகும்.

நித்தியம் மாத்திரமே நிஜம் !
இங்கு ஒருவனுக்கு எவ்வளவு பெரிய அநியாயங்கள் உண்டானாலும் அவைகள் எல்லாம் நித்தியம் வரை தொடர்வதில்லை!

மனிதன் இந்த மாயை உலகில் மாயையை உண்மை என்று பற்றிக்கொண்டு வாழத்துடிக்கும் ஒவ்வொரு இமைப்பொழுதும் நித்தியத்தைக் குறித்த சிந்தனையற்றவனாக இருக்கிறான்.
இந்த உலகில் அவனவன் இருதயத்தில் உண்டான குணங்களின்படியே நித்தியம் தீர்மானிக்கப்படுகிறது.

தேவனுக்கு முன்பாக தாழ்மைப்படுவது,அவருடைய வார்த்தைக்கு கீழ்படிவதும்,நற்கிரியைகளை தேவன் நம்மூலமாக செய்ய இடம்கொடுப்பதுமல்லாது வேற எதுவும் மனிதனிடம் தேவன் எதிர்பார்க்கவில்லை!

இதை மனிதன் நிறைவேற்றும்போது தேவசித்தம் செய்கிறவனாக கணக்கிடப்பட்டு நித்தியம் தீர்மானிக்கப்படுகிறது.

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android.
http://www.mediafire.com/file/o605w84adwc3lb9/Daily_bread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post