இச்சையடக்கம்

இச்சையடக்கம் என்பது மனதில் ஆசைகள் உண்டாகாதிருப்பதே! அது ஒருவனுக்குள் கிறிஸ்துவின் சிந்தை உருவாகும்போதே அவை சாத்தியமாகும்.

இச்சை வரும்போது நாம் அவற்றை அடக்கி வேறு காரியத்தில் மனதை செலுத்தினாலும் அந்த இச்சை ஒரு ஏக்கத்துடன் நம்மில் மறைந்து இருக்கும் அந்த இச்சைக்கு விருந்து எப்போதாவது இயல்பாக கிடைக்கும்போது மிக வெறியுடன் செயல்படுவதை அப்போது அறியமுடியும் ,அதை கட்டுப்படுத்தும் பெலன் அப்போத்து இருக்காது!

இச்சையடக்கத்தின் ஆரம்பம் விலகி ஓடுதல் அதன் தொடர்ச்சியாக தேவனுடைய சிந்தை நமக்குள் உருவாகி ஒவ்வொரு முறையும் தன்னைத்தான் வெறுத்து தனக்கு தன்னுடைய வாழ்வில் வரும் ஏமாற்றம்,நிந்தைகள்,அவமானங்கள்,கஷ்டங்கள் எல்லாவற்றையும் சகித்து அவைகளால் மனதில் அதிக வலியுடன் காணப்பட்டாலும் அதே வலிகள் காலப்போக்கில் இல்லாமல் எவற்றையும் சந்திக்கத்தக்க ஒரு தைரியத்தை இருதயம் பெரும் அதுவே கிறிஸ்துவின் சிந்தை!

கிறிஸ்துவின் சிந்தையே இச்சையடக்கம் என்பது அநேகருக்கு தெரியாத உண்மை!
கிறிஸ்துவின் சிந்தை ஒருவனில் பலமாக கிரியை செய்யும்போது அங்கே சுயத்துக்கு வாய்ப்பே இல்லை!
அந்த ஜீவியமே ஜெயங்கொள்ளும் வாழ்கை!
பரிபூரணம் அப்போதுதான் சாத்தியமாகும்.

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android. 
https://www.mediafire.com/download/xw25rfr8xbdx9c3

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post