கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?

இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து பரலோகம் செல்ல ஆசைப்படுவோர் பலர்!

ஆனால் அவருக்குள் இருந்து அவரோடு பாடுபடுவோர் சிலர்!
பாடுகள்,உபத்திரவம் உண்டாகும் போது தேவனிடத்தில் இருந்து ஆறுதலை பெற விரும்புவோர் பலர் .

ஆனால் அந்த உபத்திரவம் நல்லது அதனால் நான் கிறிஸ்துவுக்குள் இன்னும் ஆழமாக ஐக்கியம் உண்டாகவும்,எனக்குள் பொறுமை உண்டாகவும் காரணமாகியது என்று அதை சந்தோசமாக எண்ணுவோர் சிலர்.

இயேசுகிறிஸ்துவின் அற்புதங்கள் அடையாளங்களில் ஆனந்தம் அடைவோர் பலர் ஆனால் தனக்கு இவ்வுலகம் பாத்திரமல்ல என்று துன்பங்களை சகித்து கிறிஸ்துவுக்குள் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு நிந்தையையும்,பாடுகளிலும் கிறிஸ்துவுக்குள் வாழ்கிறவர்கள் சிலர்!

இயேசுகிறிஸ்து தன்னை உயர்த்தவேண்டும்,மேன்மைப்படுத்தவேண்டும் விரும்புவோர் பலர்.

ஆனால் கிறிஸ்துவுக்குள் தன்னை தான் வெறுத்து கிறிஸ்துவே மேன்மைக்கு பாத்திரர் என்று கிறிஸ்துவுக்குள் தன்னை மறைத்து வாழ்பவர் சிலர்.
கடைசியாக சகோதரரே!
உலகில் உன்னை தேவன் மேன்மைப்படுத்தவேண்டும்,
உயர்தவேண்டும் என்ற வாஞ்சையெல்லாம் உன்னிடத்தில் இருந்தால்..உலகத்தி நியதியின்படி அது தவறல்ல! ஆனால் கிறிஸ்துவுக்குள் வாழும் இளைப்பாறுதல் வாழ்கைக்கு அவையே மிகப்பெரிய தடையாக உங்கள் சுயநீதியாக இருக்கும்.

தன்னுடைய எல்லாவற்றையும் ஒருவன் கொடுத்திட விரும்பினாலும்,தன்னுடைய நற்பெயரையோ ,நன்மதிப்பையோ இழக்க விரும்பமாட்டான் ஆனால் தேவன் அவற்றையும் இழக்கும்படி வழிநடத்தி தன்னைத்தான் வெறுக்கும் நிலையை கற்றுக்கொள்ளச்செய்கிறார்.
அதன்பின்பே கிறிஸ்துவுக்குள் என்ற ஆழமான அனுபவத்துக்குள் தன்னை குப்பையாகவும்,ஒன்றுமில்லாதவனாகவும் இருக்கும் நிலையை அவன் அறிந்து தேவனை மாத்திரமே உயர்த்துகிறவனாக அவருக்கே மேன்மை செலுத்துகிறவனாக காணப்படுவான்.

அல்லேலூயா
மகிமையின் ராஜா சீக்கிரமாக வருகிறார்!
ஆமேன் இயேசுவே வாரும்!

dailybreadchristian.blogspot.com

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post