மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது

மனந்திரும்புங்கள்
பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது எனறு பிரசங்கம் பண்ணினான்.
மத்தேயு 3:2

மனம் திருப்பப்படுதல்  மனம் முன்பு எங்கே இருந்தது?
அதாவது பழையநிலைக்கு வருதல்.
அப்படியானால் அந்த மனம் ஆதியில் தேவனோடு ஐக்கியமாக இருந்தது.

மனம் விட்டு பேசுவோம்
மன சாட்சி சுத்தமானப் பின்பு அங்கே ஐக்கியமும் பரிசுத்தமாக இருக்கும்.
ஆகையால்.....மனம் முன்பு இருந்த நிலைக்கு திரும்ப வருவதே மனந்திரும்புதல்.

சரி ...... மனந்திரும்புதலை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
கனி கொடுப்பதால் ...அதாவது மனந்திரும்பியதுக்கான அடையாளம் என்ன?

கிறிஸ்துக்குள் நாம் நம்மை எவ்வித நிபந்தனையற்ற விதத்தில் சரனடைவது.
இது எவ்வித சாத்தியம்?
சிலர் ...நல்லவர்கள் ஆக இருக்க முயற்சிகள் பல செய்தும் தோற்றுவிடுவார்கள்.

அதே போல் கிறிஸ்தவர்கள் வேத வசனத்தின்படி நடக்க சுயமாக தானே முயன்று கடைசியில் தோற்றுவிடுவர்
ஓ.... தேவனே என்னால் முடியாது..
நான் நல்லவன் அல்ல...

என் உதடுகள் அருவருப்பானது.....
நான் ஒரு மாய்மாலக்காரன்.
இப்படியாக தன் நிலையை உணர்ந்து தன் தவறுகளையும், மீறுதல்களையும் கூறி வருந்துதல் ஒரு அடையாளம்.
ஆகையால்.....

எவ்வித வருந்துதலும் இல்லாமல்
நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன் அவர் நீதிமான்.அவர்தான் கடவுள்*என்று மனதில் ஏற்றுக்கொண்ட காரியம் மனந்திரும்புதல் அல்ல ...

அவை கடவுள் யார் என்பதை அறிந்தது மாத்திரமே!
இவர் தான் என் அப்பா என்பதற்கும் .

அப்பா இதோ உங்களிடம் வந்துவிட்டேன் நான் செய்த என் தவறுகளையும்,மீறுதல்களையும் மன்னித்துக்கொள்ளுங்கள் ,என்னை உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். என்பதற்கும் எவ்வளவு  வித்தியாசம்
மனந்திரும்புதல் என்பது அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சம்பவம்.
முன்பு ஏதேனில் தேவனோடு செலவிட்ட அந்த மனம் வஞ்சிக்கப்பட்டு கறைபட்டு வஞ்சகத்தின் வழியில் சாத்தானால் திருப்பப்பட்டது.
ஒரே மனிதன் தன் மனம் தவரானதை தெரிந்துக்கொண்டதினால் ......விளவு கீழ்படியாமை என்ற பாவம் முழு மனுக்குலத்தையும் அடைத்து சிறையாக்கினது....

அடிமைக்கு பிறந்தவன் அடிமை என்ற விதிமுறை
பாவத்துக்கு அடிமையான ஆதாம் சந்ததியில் பிறந்த எல்லோரும் அடிமையே!

ஓ தேவனே! இந்த பாவத்தில் இருந்து நான் என்னை விடுவிக்கமுடியாதே!
மன்னிப்பு ஒன்றே!
நீ யாரை விட்டு வந்தாய்?

முன்பு யாரிடம் ஐக்கியமாக இருந்தாய்?
யார் உன்னை வஞ்சித்தது?
பாவத்தின் வஞ்சனை உன்னை மரணத்துக்குள் தள்ளியதே உன் தேவனோடு நீ பிரிக்கப்பட்டதே முதல் மரணம்.

உனக்குள் ஜீவன் மருபடியும் உண்டாக வேண்டுமானால் நீ மனந்திரும்பி அப்பா அப்பா இதோ!
நான் வந்துவிட்டேன் என் தப்பிதங்களையும் தவறுகளையும் மீறுதலையும் மன்னியும் என்று தன் நிலை அறிந்து மகன் கதறும்போது.....
தாயுள்ளம் கொண்ட தந்தை தன் ஆதிகாலத்தில் தன்னோடு இருந்த இந்த ஆத்துமா என்னிடத்தில் மீண்டும் ஐக்கியம் கொள்ள வாஞ்சிக்கிறது.

மனம் திரும்பி தேவனிடத்தில் வந்தவுடன் அந்த ஆத்துமாவுக்கு தேவன் மந்த நிலையில் இருந்த ஆவிக்குள் தேவனோடு ஐக்கியம் கொள்ளும் ஜீவனைக் கொடுத்து இப்பொழுது ஜீவனின் உணர்வு உண்டானது....

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android. 
https://www.mediafire.com/download/xw25rfr8xbdx9c3

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post