தேவனே உம். வழிகள் ஆச்சரியமானவைகள்.

தேவனே உம். வழிகள் ஆச்சரியமானவைகள்.

ஒருவன் தேவனுடைய வழியில் நடக்க கீழ்படிகிற இருதயம் மிக அவசியம்
உன்னை அவர் செம்மையாகவே வழிநடத்த விரும்புகிறார் ஆனால் நாமோ காத்திருக்காமல் சுய தெரிந்துக்கொள்ளுதலை பெற்றுக்கொள்கிறோம் அது தவறுக்கும்,நஷ்டத்திலும் நம்மைக்கொண்டுப்போய்விடும்.

நீ நடக்கவேண்டிய பாதையைப்பற்றி ஐயம் உனக்கு ஏற்படும்போது ,தீர்ப்பு எடுப்பதை தேவ ஆவியானவரிடம் ஒப்படைத்துவிடு.

மற்றும் நீ செல்லவேண்டிய் சரியான வழியைத் தவிர ,வேறு எல்லா வழிகளையும் அடைத்துவிடுமாறு அவரை வேண்டிக்கொள்.

இதற்கிடையில் நீ சென்றுக்கொண்டிருக்கும் பாதையில் தொடர்ந்து செல்.உனக்கு வேறு வழி காட்டப்படும் குறிகள் எதும் தென்படாவிட்டால் நீ ஆண்டவர் காட்டும் நெறியில்தான் இருக்கிறாய் என்று நினைத்துக்கொள்.

உனக்கு முன்னால் அவ்வழியில் அவர் சென்றிருக்கிறார் என்பதையும்,நீ செல்லவேண்டும் என்று விரும்பிய பல வழியையும் அடைத்திருக்கிறார் என்பதனை அறி!.

இவையாவற்றுக்கும் அப்பால் அவர் அடைக்காமல் வைக்கப்பட்ட வழி ஒன்று உள்ளது என்பதில் நிச்சயம் கொண்டிரு.
அதனைத் திறந்து மேலும் செல் அப்பொழுது வாய்ப்புகள் என்ற ஆழமான ஆறு ஒன்றைக் காண்பாய்.
அதுபோல ஒன்றையும் கனவில் கூட கண்டிருக்கமாட்டாய்.

அதில் நீ உன் படகை செலுத்து .அது உன்னை ஆழ்கடலுக்கு வழிநடத்தும்.

நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது, மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்.
ஏசாயா 26:7

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android. 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post