வெளிப்பாட்டின் ஐந்தாவது முத்திரை



ஐந்தாவது முத்திரை-உபத்திரவ காலம்

அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 6:9

அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 6:10

அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது, அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 6:11


இது கடவுளின் சொந்த மக்கள் கடவுளை அறிந்தவர்கள் மற்றும் உண்மையான சுவிசேஷம் அறிந்தவர்கள் கொல்லப்படுவது பற்றி விவாதிக்கிறது.

இதே தீர்க்கதரிசன நிகழ்வை  இயேசுகிறிஸ்து மத்தேயு 24: 9-ல் எவ்வாறு விவரிக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள், என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
மத்தேயு 24:9

ஆட்டுக்குட்டியானவர் புஸ்தகத்திலுள்ள ஐந்தாம் முத்திரையை உடைக்கிறார். அப்போது புதிய வெளிப்பாடு எதுவும் காணப்படவில்லை புதிய தீர்க்கதரிசனம் எதுவும் சொல்லப்படவில்லை. அங்கு ஆறுதலான வார்த்தைகள் உண்டாயிற்று மகா உபத்திரவத்தில் சிக்குண்டிருக்கிறவர்களுக்கு தேவனுடைய சமூகத்தில் ஆறுதலான வார்த்தைகள் சொல்லப்படுகிறது.

ஐந்தாம் முத்திரை உடைக்கப்பட்டது யோவான் இரத்த சாட்சிகளுடைய ஆத்துமாக்களைப் பார்க்கிறார். மகாபரிசுத்த ஸ்தலத்திலே அவற்றைப் பார்க்கிறார். பரலோகத்திலே கிறிஸ்துவானவருடைய பாதபடியில் அந்த ஆத்துமாக்களைப் பார்க்கிறார். அவர்கள் பலிபீடத்தின் கீழே இருக்கிறார்கள். இந்த உலகத்தில் கர்த்தருக்காக ஊழியம் செய்து பாடுகள் அனுபவித்த ஊழியக்காரர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இவர்களில் அநேகர் தேவவசனத்தினிமித்தமும், தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டார்கள்.

இந்த உலகம் இவர்களுக்கு பாத்திரமா இருக்கவில்லை இப்பிரபஞ்சம் அவர்கள் வெறுத்தது உலகத்தால் வெறுத்து துன்புறுத்தப்பட்ட என்னுடைய பிள்ளைகளை கர்த்தரோ என்னுடைய பரலோகத்தில் ஒரு மகிமையான ஸ்தலத்திலே கொண்டு வந்து நிறுத்துகிறார். அவர்களுக்குப் பூமியில் இடமில்லை. பூமியிலே அவர்கள் பூரண ஆயுசு வாழ முடியவில்லை உலகத்தார் அவர்களை தேவவசனத்தை னிமித்தமும் அவர்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொன்றுவிட்டார்கள் உன்னதமான நோக்கத்திற்காக இவர்கள் இரத்த சாட்சியாக மரித்துப் போனார்கள் இவர்களுடைய
ஆத்துமாக்கள் பலிபீடத்தின் கீழே இருப்பதை யோவான் காண்கிறார்.

தங்கள் இரத்தத்தைக்குறித்து பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் தேவன் நியாயத்தீர்ப்பு செய்யவேண்டுமென்றும், அவர் அவர்களை சீக்கிரமாய் பழிவாங்கவேண்டுமென்றும் பரிசுத்தவான்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் கர்த்தரோ அவர்களை இன்னும் கொஞ்ச காலம் பொறுமையாயிருக்குமாறு சொல்லுகிறார்.

இரத்தசாட்சியாக மரித்துப்போனவர்கள் இன்னும் கொஞ்ச காலம் இளைப்பாறவேண்டுமென்று கர்த்தர் அவர்களுக்குச் சொல்லுகிறார். அவர்களுடைய இரத்தத்தைக்குறித்து பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் அப்போது நிச்சயமாகவே நியாயத்தீர்ப்பு செய்யப்படும். கர்த்தர் அவர்களை அப்போது மெய்யாகவே பழிவாங்குவார்.

இரத்த சாட்சியாக மரித்துப் போனார்கள் எவ்வளவு காலம் பொறுமையோடு காத்திருக்கவேண்டும் என்பதையும் தேவன் தெளிவுபடுத்துகிறார். ஏற்கெனவே இரத்த சாட்சியாக மரித்துப்போன இவர்களைப் போல இன்னும் கொலை செய்யப்பட போகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஏற்கெனவே
இரத்தசாட்சியாக மரித்துப்போனவர்களுடைய
உடன் பணிவிடைக்காரராகவும், சகோதரருமாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இப்போது பூமியிலே கர்த்தருக்காக ஊழியம் செய்து வருகிறார்கள். இவர்களைப் போலவே அவர்களும் தேவவசனத்தினிமித்தமும், தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்படுவார்கள்.

யோவான் 16:2 - அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள், மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.

வெளிப்படுத்தின விசேஷம் 12:17 - அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.
வெளிப்படுத்தின விசேஷம் 11:7 - அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.
வெளிப்படுத்தின விசேஷம் 12:11 - மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர்.

வெளிப்படுத்தின விசேஷம் 6:10 - அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
லூக்கா 18:7-8 - அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:2 - தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.
வெள்ளை அங்கிகள் -பரிசுத்தவான்களுடைய நீதி.
வெளிப்படுத்தின விசேஷம் 19:8 - சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது, அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
கலாத்தியர் 3:27 - ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
ஏசாயா 61:10 - கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன், என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது, மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:10 - நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே, இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான், பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்..
மனம் திரும்புங்கள் கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது.
Download our daily bread app on below link.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post